`இதனை மறந்துவிடுங்கள்'- வகுப்பறையில் மாணவிகள் பாலியல் வன்கொடுமையை மறைத்த பள்ளி முதல்வர்

`இதனை மறந்துவிடுங்கள்'- வகுப்பறையில் மாணவிகள் பாலியல் வன்கொடுமையை மறைத்த பள்ளி முதல்வர்

வகுப்பறையில் வைத்து இரண்டு மாணவிகளை வாலிபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த கொடூர சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது.

டெல்லி மாநகராட்சி பள்ளியில் வாலிபர் ஒருவர் வகுப்பறைக்குள் நுழைந்து, வலுக்கட்டாயமாக அங்கிருந்த 2 மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியரிடம் மாணவிகள் கூறியுள்ளனர். இந்த சம்பவம் வெளியில் தெரிந்தால் தங்கள் பெயருக்கு கலங்கம் ஏற்பட்டு விடும் என இருவரும் அமைதியாக இருந்ததோடு, இதனை மறந்துவிடும் படி மாணவிகளை மிரட்டியுள்ளனர்.

இதனிடையே, பள்ளியில் தங்களுக்கு நடந்த கொடுமை குறித்து பெற்றோர்களிடம் மாணவிகள் கூறியுள்ளனர். இதையடுத்து, டெல்லி பெண்கள் ஆணையத்தில் பெற்றோர்கள் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து, டெல்லி போலீஸ் மற்றும் கிழக்கு முனிசிபில் மாநகராட்சிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள பெண்கள் ஆணையம், சம்பந்தப்பட்ட குற்றவாளி மீதும், அதை மறைத்த பள்ளி நிர்வாகம் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது. மேலும் பள்ளி முதல்வர் மற்றும் வகுப்பு ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

"இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறோம். இது மாநகராட்சி பள்ளி என்பதால் சிசிடிவி கேமராக்கள் இல்லை. அதனால் குற்றவாளி குறித்த தகவல் தெரியவில்லை. இருப்பினும் இதற்காக தனிப்படை அமைத்து அக்கம்பக்கத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்து வருகிறோம். அதேபோல பள்ளி மாணவிகளிடம் குற்றவாளி குறித்த தகவல்களை பெற்று அவர்கள் தந்த அடையாளத்தின் அடிப்படையில் தேடி வருகிறோம்" என்ற டெல்லி போலீஸ் கமிஷ்னர் சஞ்சய் ஜெயின் கூறியுள்ளார்.

பள்ளியில் புகுந்து வகுப்பறையில் வைத்து மாணவிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் டெல்லியில் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in