கட்டிப்போட்டு மாணவி பாலியல் வன்கொடுமை: 8-ம் வகுப்பு மாணவர்கள் செய்த கொடூரம்!

கட்டிப்போட்டு மாணவி பாலியல் வன்கொடுமை:  8-ம் வகுப்பு மாணவர்கள் செய்த கொடூரம்!

சென்னையில் 8-ம் வகுப்பு மாணவியை கட்டிப்போட்டு 4 மாணவர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்த தம்பதிக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இவர்களில் மூத்த மகளுக்கு 15 வயதும், 2வது மகளுக்கு 13 வயதும், 3-வது மகளுக்கு 11 வயதும் ஆகிறது. இவர்களின் தாய் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிகிறார்.

அவரது 2-வது மகளான 13 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். அவருடன் படிக்கும் 8-ம் வகுப்பு மாணவர்கள் 4 பேர் மாணவியின் வீட்டுக்குச் சென்று படிப்பதை வழக்கமாக வைத்திருந்தனர்.

இந்த நிலையில் இந்த 4 மாணவர்களும் மாணவியின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் புகுந்தனர். பின்னர் கதவைப் பூட்டிக்கொண்டு மாணவியைக் கட்டிப்போட்டனர். பின்னர் 4 பேரும் சேர்ந்து மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி கூச்சல் போட்டார். இதையடுத்து 4 மாணவர்களும் இதுபற்றி யாரிடமாவது சொன்னால் கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டல் விடுத்துள்ளனர்.

தனக்கு நேர்ந்த இந்த கொடுமையை மாணவி யாரிடமும் சொல்லாமலேயே இருந்தார். இது அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தனது தங்கையிடம் நடந்த விஷயத்தைத் தெரிவித்துள்ளார். இதன் பின் தாய்க்கு இந்த விஷயம் தெரிய வந்துள்ளது.

இதனால் அதிர்ச்சிடைந்த தாய், பள்ளி தலைமை ஆசிரியரிடம் முறையிட்டுள்ளார். அவர் போலீஸில் புகார் அளிக்க அறிவுறுத்தினார். இது தொடர்பாக மாணவியின் தாய், ராயபுரம் மகளிர் போலீஸில் புகார் செய்தார். இதையடுத்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் 4 மாணவர்களும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் காசிமேடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in