பகீர்... சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்த வேன்... 7 பேர் உடல் கருகி பலி!

தீப்பிடித்த வேன்
தீப்பிடித்த வேன்

ஜெர்மனியில் சாலையில் சென்று கொண்டிருந்த வேன் திடீரென தீப்பற்றி எரிந்ததால் 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜெர்மனியில் உள்ள முனிச் நகரில் முஹல்டோர்ப் நெடுஞ்சாலையில் வேன் ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது வழியில் போலீஸ் சோதனைச்சாவடியில் இருந்த போலீஸார் சோதனைக்காக அந்த வேனை நிறுத்தும்படி கூறினர். 

ஆனால் ஓட்டுநர் வேனை நிறுத்தாமல் வேகமாக செல்ல முயற்சித்தார். இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் கவிழ்ந்து, முற்றிலும் தீப்பிடித்து எரிந்தது. இந்த வேனில் குழந்தைகள், பெண்கள் உட்பட 20 பேர் பயணம் செய்துள்ளனர்.

விபத்திற்குள்ளான
விபத்திற்குள்ளான

இந்த கோர விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்தவர்கள், சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விசாரணையில்  வேனில் பெண்கள், சிறுவர்கள் உட்பட சுமார் 20 அகதிகள் இருந்ததாக தெரிகிறது.

அவர்கள் சட்டவிரோதமாக ஆஸ்திரியா நாட்டுக்கு செல்ல முயன்றபோது இந்த விபத்து நேரிட்டது தெரியவந்தது. இந்த விவகாரம் குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in