ரவுடிகளுடன் லாட்ஜில் ஸ்கெட்ச் போட்ட பள்ளி மாணவர்கள்: பழிக்குப் பழி கொலையைத் தடுத்த சென்னை போலீஸ்

ரவுடிகளுடன் லாட்ஜில் ஸ்கெட்ச் போட்ட பள்ளி மாணவர்கள்: பழிக்குப் பழி கொலையைத் தடுத்த சென்னை போலீஸ்

காவல்துறையினரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் சென்னையில் நடக்கவிருந்த கொலை சம்பவம் தடுக்கப்பட்டுள்ளது. கொலை செய்ய திட்டமிட்டிருந்த 14 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர்களில் 10 பேர் பள்ளி படிக்கும் மாணவர்கள் என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

கடந்த 2021-ம் ஆண்டு ஐஸ்ஹவுஸ் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சி விக்கி என்பவர் கொலை செய்யப்பட்டார். நேற்று இரவு விக்கி கொலையில் தொடர்புடைய ஒருவரை பழிக்குப் பழியாக கொலை செய்வதற்கு 14 நபர்கள் திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள தமிழ்நாடு லாட்ஜில் அறை எடுத்துத் தங்கி இருந்தனர். இதையடுத்து திருவல்லிக்கேணி போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அங்குச் சென்ற காவல்துறையினர் அவர்களைக் கைது செய்துள்ளனர்.

அவர்களிடமிருந்து 2 கிலோ கஞ்சா, இரண்டு கத்தி, ஒரு வீச்சரிவாள், ஒரு கடப்பாரை ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். விக்கியைக் கொலை செய்தவர்களில் ஒருவர் திருவல்லிக்கேணி பகுதிக்கு நேற்று வர இருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில் 14 நபர்களும் அவர்களைக் கொலை செய்வதற்காக திட்டமிட்டுக் காத்திருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள பழைய வண்ணாரப் பேட்டையைச் சேர்ந்த சரத்குமார், பரத்குமார், சாய்காந்த் உள்ளிட்ட 14 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் பத்து பேர் பள்ளி மாணவர்கள் என்ற அதிர்ச்சி தகவலை காவல்துறையினர் தெரிவிக்கிறார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in