கார் மோதியதில் கால்கள் துண்டான தந்தை... உடல் நசுங்கி 10ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு

பிரியா
பிரியா
Updated on
1 min read

ராணிப்பேட்டை அருகே நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் பத்தாம் வகுப்பு மாணவி பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த பில்லாஞ்சி பகுதியில் உள்ள திடீர் நகரைச் சேர்ந்தவர் சங்கர் (40).  டிவிஎஸ் தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் இவர் பத்தாம் வகுப்பு படிக்கும்  தனது மகள் பிரியாவுடன் (15)  உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக நேற்று தனது இருசக்கர வாகனத்தில் புறப்பட்டுள்ளார்.

அப்போது, திருவள்ளுவர் மாவட்டம் ஸ்ரீ காளிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் ஓட்டி வந்த கார், இவர்களின் இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக  மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், இருசக்கர வாகனத்தின் பின்புறம் அமர்ந்திருந்த மாணவி பிரியா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், அவரது தந்தையின் இரண்டு கால்களும் துண்டானது.  

இது குறித்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சோளிங்கர் போலீஸார், கால்களை இழந்து தவித்துக் கொண்டிருந்த சங்கரை மீட்டு வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கார் விபத்தில் பலியான மாணவி பிரியாவின் உடலை  பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனைத்தொடர்ந்து, கார் ஓட்டுநர் ராஜேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்தில் இறந்த மாணவி பிரியாவின் உறவினர்கள், சோளிங்கர் அரசு மருத்துவமனை எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சமாதானப்படுத்தினர். இதனால் சோளிங்கரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டம் காரணமாக அப்பகுதியில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in