
திருப்பூர் மாவட்ட தீயணைப்பு துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடத்திய சோதனையில், கணக்கில் வராத 1.45 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வருகிற 12-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பல்வேறு இடங்களில் பட்டாசு கடைகள் அமைப்பதற்கு அனுமதி கோரி மாவட்ட நிர்வாகத்திற்கு வியாபாரிகள் மனு அளித்திருந்தனர்.
பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்குவதில், தீயணைப்புத் துறைக்கு முக்கிய பங்கு இருந்து வருகிறது. இதனால் பட்டாசு கடைகள் அமைக்க தீயணைப்புத் துறையினர் லஞ்சம் பெறுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகிறது.
இந்நிலையில் திருப்பூர் மாவட்ட தீயணைப்பு துறை அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் திடீரென இன்று சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத 1.45 லட்சம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து இந்த பணத்தை வாங்கியது யார்? யாருக்குச் சொந்தமானது என்பது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் தீயணைப்பு துறை அலுவலகத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.
இதையும் வாசிக்கலாமே...
HBD Kamalhassan: கமல்ஹாசன் வேண்டுகோளை நிராகரித்த ’சூப்பர் ஸ்டார்’!
இன்று 19 மாவட்டங்களில் கனமழை... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
சத்தீஸ்கர் வாக்குப்பதிவில் பரபரப்பு... குண்டுவெடிப்பில் பாதுகாப்பு படை வீரர் காயம்!
திமுகவுடன் கூட்டணியா? கமல் சொன்ன 'நச்' பதில்!
வீட்டை காலி செய்ய மிரட்டுகிறார்! நடிகர் பிரபுதேவா சகோதரர் மீது பரபரப்பு புகார்