மதுரையைச் சேர்ந்த ரவுடி தலை துண்டித்துக் கொலை... கரூரில் பயங்கரம்!

ராமர் பாண்டியன்
ராமர் பாண்டியன்

மதுரையில் தேவர் ஜெயந்திக்கு சென்று விட்டு வந்தவர்கள் மீது குண்டு வீசி கொலை செய்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளி கரூரில் இன்று தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர்
கரூர்

கடந்த 2012-ம் ஆண்டு தேவர் ஜெயந்திக்குச் சென்று விட்டு வந்தவர்கள் மீது சிந்தாமணி அருகே ஒரு கும்பல் பெட்ரோல் குண்டு வீசியது. அத்துடன் அரிவாளால் வெட்டியது. இதில் 7பேர் கொலை செய்யப்பட்டார். மேலும் பலர் படுகாயமடைந்தனர். இந்த வழக்கில் 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் முதல் குற்றவாளியான மதுரை மேல அனுப்பானடியைச் சேர்ந்தவர் ரவுடி ராமர் பாண்டியன் என்ற ராமகிருஷ்ணன்(36). இவருடன் சேர்ந்து மற்றொரு குற்றவாளியான கார்த்திக்(39) ஆகிய இருவரும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடர்பாக ஆஜராகி வந்தனர். இந்த நிலையில், மதுரையில் பாதுகாப்பு இல்லாததால் கரூர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகி வந்தனர்.

கரூரில் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகி விட்டு மதுரைக்கு அரவக்குறிச்சி அருகே டூவீலரில் ராமர்பாண்டியன், கார்த்திக் வந்து கொண்டிருந்தனர். கரூர்- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அரவக்குறிச்சியை அடுத்த தேரப்பாடி பிரிவு சாலை அருகே காரில் வந்த மர்மக்கும்பல் டூவீலரை வழிமறித்து அவர்கள் இருவரையும் சரமாரியாக வெட்டியது.

ராமர் பாண்டியன்
ராமர் பாண்டியன்

இந்த தாக்குதலில் ராமர் பாண்டியன் என்ற ராமகிருஷ்ணன் தலை துண்டிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயங்களுடன் கார்த்திக் மீட்கப்பட்டு, போலீஸார் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டார்.

பட்டப்பகலில் கொலை வழக்கில் தொடர்புடைய மதுரையைச் சேர்ந்த ரவுடி கரூரில் தலை துண்டித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


இளம் விஞ்ஞானிகளை உருவாக்கும் திட்டம்: நாளை முதல் மாணவர்கள் விண்ணப்பிக்க இஸ்ரோ அழைப்பு!

மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு ரூ.13,720 கோடி; கோவையில் கலைஞர் நூலகம்: பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்பு!

தஞ்சையில் ரூ.120கோடியில் சிப்காட்; ரூ.2483 கோடியில் விருதுநகர், சேலத்தில் ஜவுளிப் பூங்கா: பட்ஜெட்டில் அறிவிப்பு!

பயங்கரம்... பழங்குடி சமூகத்தினர் இடையே நடந்த மோதலில் 64 பேர் சுட்டுக்கொலை!

பகீர்... நடுரோட்டில் மனைவியை வழிமறித்து தீ வைத்த கணவன்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in