மனைவி, மகள் கண்முன்னே ரவுடி வெட்டிக்கொலை: ஜாமீனில் வந்தநிலையில் கும்பல் வெறிச்செயல்

ரவுடி  சரவணன்
ரவுடி சரவணன்

சென்னை மதுரவாயில் அருகே ஆட்டோவில் சென்ற ரவுடி கேங்கு சரவணன் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கடந்த மாதம் ஜாமீனில் வெளியே வந்த ரவுடி மனைவி, மகள் கண்முன்னே வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மயிலாப்பூர் பிஎன்கே கார்டன் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி கேங்கு சரவணன் என்ற கிழங்கு சரவணன் (41). "ஏ" கேட்டகிரி ரவுடியான சரவணன் மீது பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 19ம் தேதி புழல் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த ரவுடி சரவணன் தற்போது தனது மனைவி செல்வி, மகள் பரமேஸ்வரி உடன் வானகரம் சக்தி நகரில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு ரவுடி சரவணன் தனது மனைவி, மகள் மற்றும் அக்கா மகன் கேசவன் ஆகியோருடன் ஆட்டோவில் மதுரவாயலில் உள்ள டிபன் கடையில் சாப்பிட சென்றுள்ளார்.

பின்னர் அனைவரும் டிபன் சாப்பிட்டு விட்டு ஆட்டோவில் வானகரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். மதுரவாயல் கன்னி அம்மன் கோவில் அருகே வரும் போது பின்னர் 4 இருசக்கர வாகனத்தில் அவர்களை பின்னர் தொடர்ந்து வந்த 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று ஆட்டோவை வழிமறித்து ரவுடி கிழங்கு சரவணனை மனைவி, மகள் கண்ணெதிரே கத்தியால் சரமாரி வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பி சென்றனர். இதில் ரவுடி கிழங்கு சரவணன் சம்பவயிடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அவரது மனைவி அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த மதுரவாயல் போலீஸார் ரவுடி சரவணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் புதூர் ரவுடி அப்பு என்பவருக்கு ரவுடி கிழங்கு சரவணனுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததும் அதன் காரணமாக ரவுடி அப்பு தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ரவுடி கிழங்கு சரவணனை கொலை செய்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீஸார் தனிப்படை அமைத்து ரவுடி அப்பு உட்பட 6 பேரை தேடி வருகின்றனர். மனைவி, மகள், கண்முன்னே ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in