
மாலத்தீவு கடற்படையால் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர்கள் 12 பேரும் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், தங்களது விசைப்படகை விடுவிக்க வேண்டும் எனக் கூறி மீனவர்கள் மாலத்தீவிலேயே காத்திருப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தூத்துக்குடி தருவைகுளம் பகுதியில் இருந்து அதே பகுதியைச் சேர்ந்த மைக்கேல் பாக்யராஜ் என்பவர் படகில் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி ஆழ்கடலுக்கு விக்னேஷ், உதயகுமார், மைக்கேல்ராஜ், செல்வசேகரன், அந்தோணி கிறிஸ்டோபர், பரலோக திரவியம், அன்பு, ஆதிநாராயணன், மகேஷ் குமார், மாதேஷ் குமார், மணி, சக்தி ஆகிய 12 பேர் மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் மீன்பிடித்துவிட்டு கடந்த 23ம் தேதி மாலத்தீவு கடல் பகுதி வழியாக கரைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மாலத்தீவு கடற்படையினர், அத்துமீறி மாலத்தீவு கடல் பகுதியில் நுழைந்ததாக கூறி அவர்கள் 12 பேரையும் கைது செய்து விசைப்படகையும் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக மாலத்தீவு கடற்படையினர் மூலம் தருவைகுளம் மீனவர் கிராமத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து மாலத்தீவு கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை, மத்திய, மாநில அரசுகள் மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசைப்படகு உரிமையாளர்கள் சங்கம் மற்றும் உறவினர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இது தொடர்பாக மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். இதனிடையே மீனவர்கள் 12 பேரையும் இன்று மாலத்தீவு கடற்படை விடுதலை செய்துள்ளது.
இருப்பினும் விசைப்படகை விடுவிக்க கடற்படை மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் படகை விடுவிக்கும் வரை மாலத்தீவிலேயே இருக்கப் போவதாக கூறி, மீனவர்கள் காத்திருப்பில் ஈடுபட்டுள்ளனர். வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகள், மாலத்தீவு அதிகாரிகளுடன் பேசி, விசைப்படகை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் வாசிக்கலாமே...
அடுத்த அதிர்ச்சி... நீட் தேர்வால் மாணவி தற்கொலை!
அதிர்ச்சி... ‘பிரேமம்’ இயக்குநருக்கு ஆட்டிஸம் பாதிப்பு!
110 நாட்கள் உண்ணாவிரதம்... 16 வயது சிறுமியின் ஆச்சரிய சாதனை!
1000 ரூபாயில் செயற்கைக்கோள்... பிளஸ் 2 மாணவரின் அசர வைக்கும் கண்டுபிடிப்பு!
படப்பிடிப்பில் பிரபல நடிகர் படுகாயம்... மருத்துவமனையில் அனுமதி!