வீடுபுகுந்து வெட்டிக்கொல்லப்பட்ட ரவுடி... கதறியழுத கர்ப்பிணி மனைவி... சென்னையில் பயங்கரம்!

ஆனந்த்
ஆனந்த்

சென்னையில் வீடு புகுந்து ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. மனைவி முட்டை வாங்க வெளியில் சென்ற நேரத்தில் இந்த கொடூரம் நடந்துள்ளது.

சென்னை ஆர்.கே.நகர் பகுதியில் உள்ள சிவாஜி நகரில் வசித்து வருபவர் ரவுடி லொட்டை என்ற ஆனந்த்(29). இவருக்கு திருமணமாகி ரோஜா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணமான நிலையில் ரோஜா தற்போது 3 மாத கர்ப்பிணியாக உள்ளார். மேலும், ஆனந்த் மீது பல்வேறு காவல் நிலையங்களில் 13க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது.

கொலை செய்யப்பட்ட ஆனந்த்
கொலை செய்யப்பட்ட ஆனந்த்

இந்நிலையில், நேற்று இரவு வெளியே சென்று விட்டு மதுபோதையில் வீட்டிற்கு வந்த ரவுடி ஆனந்த் தனது மனைவியிடம் முட்டை தோசை சுட்டு தருமாறு கேட்டுள்ளார். உடனே மனைவி‌ ரோஜா முட்டை வாங்க கடைக்கு சென்ற நேரத்தில், திடீரென வீட்டில் புகுந்த அடையாளம் தெரியாத 8‌ பேர் கொண்ட கும்பல் ஒன்று வீட்டில் தனியாக இருந்த ஆனந்தை கத்தியால் சரமாரி வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பிச்சென்றது. இதில் ஆனந்த் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவயிடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

கடையில் முட்டை வாங்கி கொண்டு வீட்டிற்கு வந்த ரோஜா, கணவர் ஆனந்த் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை பார்த்து கதறி அழுதார். ரோஜாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் உடனே இது குறித்து ஆர்.கே.நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அங்கு வந்த போலீஸார் ரவுடி ஆனந்த் உடலை கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய கும்பலை தேடி வருகின்றனர்.

இதனை தொடர்ந்து, ஆனந்த் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டரா அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல கோணங்களில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலை
கொலை

முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட ரவுடி ஆனந்தின் சகோதரர் சுரேஷை கடந்த ஜனவரி மாதம் கொருக்குப்பேட்டையை சேர்ந்த ரவுடி கார்த்திக்@பொங்கல்(19) தனது நண்பர்களுடன் சேர்ந்து வெட்டியதும்‌ அதற்கு பழிவாங்கும் விதமாக ஆனந்த் திட்டம் தீட்டியது தெரியவந்தது.

மேலும், ஆனந்த் தன்னை கொலை செய்ய திட்டம் தீட்டியதை அறிந்து கொண்ட பொங்கல், முந்திக்கொண்டு தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ஆனந்தை கொலை செய்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து போலீஸார் தனிப்படை அமைத்து தப்பி ஓடிய கார்த்திக், சதீஷ்குமார் @ குசுமி, சோஷன்(23) உள்ளிட்ட சிலரை தேடி வருகின்றனர்.

மனைவி முன்று மாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் கணவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

தீவிரவாதிகள் தாக்குதலில் 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் மரணம்; 6 பேர் படுகாயம்

மார்க் நெக்ஸ்ட்... ஸ்கில்ஸ் ஃபர்ஸ்ட்... பள்ளி மாணவர்களுக்கான டிப்ஸ்!

பீகாரில் இருந்து உ.பி.,க்கு 95 குழந்தைகள் கடத்தல்? - அதிரடியாக மீட்ட குழந்தைகள் நல ஆணையம்!

பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக போராட்டம்... அமெரிக்காவில் கோவை மாணவி கைது!

சல்மான் கான் வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட வழக்கு... போர்ச்சுகல் நாட்டில் அன்மோல் பிஷ்னோய் பதுங்கலா?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in