ராமஜெயம் கொலை வழக்கு சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு மாற்றம்!

உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
ராமஜெயம்
ராமஜெயம்

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் 29ம் தேதி அதிகாலையில் நடைபயிற்சிக்காக வீட்டில் இருந்து வெளியே சென்றபோது தமிழக அமைச்சர் கே.என்.நேரு சகோதரர் ராமஜெயம் மர்ம கும்பலால் கடத்தப்பட்டார். பின்னர் ராமஜெயத்தை கை, கால்களை கட்டி தாக்கி, வாயில் பிளாஸ்திரி ஒட்டி கொலை செய்து உடலை திருவளர்சோலை பகுதியில் வீசிச்சென்றது கும்பல்.

இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. பல்வேறு கட்டங்களாக விசாரணை நடத்தியும் கொலையாளிகள் யார்?, ராமஜெயம் எதற்காக கடத்தி கொலை செய்யப்பட்டார்? என்பதற்கான எந்தவித தடயமும் சிக்கவில்லை. இந்தநிலையில் கொலையுண்ட ராமஜெயத்தின் சகோதரர் கே.என் ரவிச்சந்திரன், சிபிஐ விசாரணையில் எந்தவித முன்னேற்றம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றத்தி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை இன்று விசாரித்து நீதிபதி பாரதிதாசன், சிபிசிஐடி, சிபிஐ என 10 ஆண்டுகள் விசாரணை நடத்தியும் ராமஜெயம் கொலைக்கான நோக்கம் கண்டறியப்படவில்லை என்றும் கொலை வழக்கை நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிக்கும் என்றும் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார், அரியலூர் டிஎஸ்பி மதம், சிபிஐ அதிகாரி ரவி ஆகியோர் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழு இவ்வழக்கை விசாரிக்கும் என்றும் அதிரடியாக உத்தரவிட்டார்.

மேலும், வரும் 21ம் தேதிக்குள் இந்த குழு விசாரணை தொடங்கி 5 நாட்களுக்கு ஒருமுறை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என ஆணை பிறப்பித்த நீதிபதி, இந்த சிறப்பு புலனாய்வு குழுவுக்கு தமிழக அரசு முழு உதவிகளை வழங்க வேண்டும் அறிவுறுத்தினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in