வளைகாப்புக்குச் சென்ற போது விபரீதம்... ரயிலில் இருந்து தவறி விழுந்து கர்ப்பிணி உயிரிழப்பு!

வளைகாப்புக்குச் சென்ற போது விபரீதம்... ரயிலில் இருந்து தவறி விழுந்து கர்ப்பிணி உயிரிழப்பு!
Updated on
1 min read

ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்த வளைகாப்புக்காக சொந்த ஊருக்குச் சென்று கொண்டிருந்த கர்ப்பிணிப் பெண் ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி அருகே உள்ள மேல் நிலைய நல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவரது மனைவி கஸ்தூரி. இவர்களுக்கு கடந்த எட்டு மாதங்களுக்கு முன் திருமணமானது. இந்த நிலையில்  கஸ்தூரி 7 மாத கர்ப்பிணியாக இருந்தார். அதனால் அவருக்கு வளைகாப்பு செய்ய அவரது குடும்பத்தினர் முடிவு செய்திருந்தனர். இதனால் சொந்த ஊரில் ஞாயிற்றுக்கிழமை கஸ்தூரிக்கு வளைகாப்பு நடைபெற இருந்தது.

இந்நிலையில் கஸ்தூரி தனது குடும்பத்தினருடன் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று இரவு புறப்பட்ட கொல்லம் விரைவு ரயிலில் பயணம் செய்துள்ளார்.  அந்த ரயில் உளுந்தூர்பேட்டை ரயில் நிலையத்தை கடந்த போது கஸ்தூரிக்கு திடீரென வாந்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அவர் ரயிலில் படிக்கட்டு பகுதிக்கு சென்று வாந்தி எடுக்க முயன்றுள்ளார். 

அப்போது அவருக்கு திடீரென மயக்கமும் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் அவர் நிலைதடுமாறி ரயிலில் இருந்து தவறி விழுந்துள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைக்கண்ட அவரது உறவினர்கள் கதறி அழுதனர். தகவல் அறிந்து வந்து  அவரது உடலை மீட்ட விருத்தாசலம் ரயில்வே காவல் துறையினர், கஸ்தூரி உடலை விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

ஊரில் நடைபெறும் கோயில் திருவிழாவில் கலந்து கொள்ளும் நோக்கிலும்,  ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள வளைகாப்பு நிகழ்ச்சிக்காகவும் சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்த கர்ப்பிணிப் பெண் ரயிலில் தவறி விழுந்து உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in