
புதுச்சேரி வில்லியனூர் அடுத்த பத்துகண்ணு பகுதியைச் சேர்ந்தவர் சத்யா(26). இவர் புதுச்சேரி ஆயுதப்படை காவல் பிரிவில் பணிபுரிந்து வந்தார். இவருடைய கணவர் வினோத் மின்துறையில் ஊழியராக பணி புரிந்து வருகிறார். இந்த நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக கணவரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த 12-ம் தேதி தாய் வீட்டிற்கு கோபித்துக் கொண்டு சென்ற சத்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இச்சம்பவம் குறித்து சத்யா குடும்பத்தார் கொடுத்த புகாரின் அடிப்படையில் சம்பவம் இடத்திற்கு சென்ற வில்லியனூர் போலீஸார் உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.
இந்நிலையில், சத்யாவின் தற்கொலைக்கு அவருடைய கணவர் வினோத் தான் காரணம் என போலீஸார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கைது செய்யப்பட்ட காவலர் சத்யாவின் கணவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கும் போது சத்யா ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பதற்கான காரணம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் புதுச்சேரியில் பணிபுரியும் போலீஸார் இடையே பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
உஷார்; 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
மீண்டும் விலை உயரும் அபாயம்: தொடர்மழையால் செடியிலேயே அழுகும் தக்காளி!
மீண்டும் மீண்டுமா... அடுத்த சிக்கலில் மாட்டித் தவிக்கும் சிவகார்த்திகேயன்!
பிரதமர் மோடி குறித்து அவதூறு: ஆம் ஆத்மிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!
கிராமத்தில் 20 முறைக்கும் மேல் மின்தடை: அதிகாரிகளைப் பழிவாங்க கவுன்சிலர் செய்த அதிர்ச்சி காரியம்!