
சமீபத்தில் நடந்த காவல் கண்காணிப்பாளர்கள் - மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், "புதிய முதலீடுகள் கிடைப்பதற்கும், அதன் வழியாக ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் எனும் இலக்கினை அடைந்து மாநிலத்தின் முன்னேற்றத்தை உறுதி செய்யவும் சட்டம் - ஒழுங்கு மிக மிக முக்கியம். தமிழ்நாட்டில் எப்போதும் சட்டம் - ஒழுங்கு சீராக இருப்பதை மாவட்ட நிர்வாகம் கண்காணிக்க வேண்டும். குறிப்பாக, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை இந்த அரசு ஒருபோதும் அனுமதிக்காது. மத நல்லிணக்கத்துக்கு ஊறுவிளைவிக்கக்கூடிய வகையில் யார் செயல்பட்டாலும், அவர்கள் மீது தயவுதாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அழுத்தம் திருத்தமாகப் பேசியிருக்கிறார்.
We’re glad you’re enjoying this story. Subscribe to any of our plans to continue reading the story.