காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு... விஷ ஊசிப்போட்டு நர்சிங் மாணவி தற்கொலை

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு... விஷ ஊசிப்போட்டு நர்சிங் மாணவி தற்கொலை

விழுப்புரத்தில் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் நர்சிங் மூன்றாமாண்டு படித்து வந்த மாணவி விஷ ஊசி செலுத்தித் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த கரிப்பாளையம் கிராம தேரடி தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் தணிகாசலம். இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர்களுக்கு இரண்டு மகள்கள். இந்நிலையில் இவரது மூத்த மகள் மகேஸ்வரி (வயது 21) இவர் புதுச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி நர்சிங் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில் இவர் தனது உறவினர் மகனான சந்துரு என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது, இதற்கு அவரது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்குள் இருந்த அறைக்குள் சென்று கதவை சாத்திக்கொண்டு வெகு நேரம் ஆகியும் வெளியே வராததால் கதவை திறந்து உள்ளே பார்த்தபோது மகேஸ்வரி மயக்க நிலையில் கிடந்துள்ளார்.

அவருக்கு அருகாமையில் விஷ ஊசி பாட்டில் ஒன்றும் கிடந்துள்ளது. உடனடியாக அவரை மீட்டு மரக்காணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அப்போது அவரை அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதனை அடுத்து மரக்காணம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பெயரில் மருத்துவமனைக்கு விரைந்து சென்ற போலீஸார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரியில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

இன்று மகாளய அமாவாசை... இதைச் செய்தால் கடன் தொல்லைத் தீரும்!

இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000... திட்டத்தை உடனே நிறுத்தச் சொல்லி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

பேச மறுத்த காதலி... வெறித்தனமாய் 13 முறை கத்தியால் குத்திய காதலன்!

தங்கம் விலை அதிரடியாக உயர்வு... சவரனுக்கு ரூ.360 உயர்ந்தது!

இன்று வானில் வர்ணஜாலம்... நெருப்பு வளையத்திற்குள் நிகழப்போகும் அற்புதம்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in