தலைக்குப்புற கவிழ்ந்த சொகுசு பேருந்து... 29 பேர் படுகாயம்!

சாலையில் தலைக்குப்புற கவிழ்ந்த ஆம்னி பேருந்து
சாலையில் தலைக்குப்புற கவிழ்ந்த ஆம்னி பேருந்து

கள்ளக்குறிச்சி அருகே தனியார் சொகுசு ஆம்னி பேருந்து ஒன்று சாலையில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 29 பேர் படுகாயம் அடைந்தனர்.

நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு தனியார் சொகுசு பேருந்து ஒன்று 27 பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று இரவு புறப்பட்டது. பேருந்தை திருச்செந்தூரை சேர்ந்த ஹரிஹரன் என்பவர் ஓட்டி வந்தார். இந்த பேருந்து இன்று காலை கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆசனூர் ஜிஎஸ்டி சாலையில் சென்று கொண்டிருந்தது. அந்த பகுதியில் தற்போது மேம்பால பணிகள் நடைபெற்று வருவதால் ஆங்காங்கே ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு உள்ளது.

பேருந்தை மீட்கும் பணிகள் தீவிரம்
பேருந்தை மீட்கும் பணிகள் தீவிரம்

அதிவேகத்தில் வந்து கொண்டிருந்த ஆம்னி பேருந்து, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் நடுவே போடப்பட்டிருந்த தடுப்பில் மோதியது. இதில் ஆம்னி பேருந்து தலைக்குப்புற கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தின் ஓட்டுநர், உதவியாளர் மற்றும் பேருந்தில் பயணம் செய்த 27 பேர் என 29 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

காயமடைந்தவர்கள் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையி அனுமதி
காயமடைந்தவர்கள் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையி அனுமதி

இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற எடைக்கல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் விபத்தில் சிக்கிய ஆம்னி பேருந்தை மீட்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in