எல்லா இந்தியர்களும் மோசமானவர்கள் அல்ல... 7 பேரால் பலாத்காரம் செய்யப்பட்ட ஸ்பெயின் பெண் பேட்டி !

கைது செய்யப்பட்டவர்கள்
கைது செய்யப்பட்டவர்கள்

ஒட்டுமொத்த இந்தியர்களும் மோசமானவா்கள் அல்ல,  இந்தியா முழுவதும் நான் பாதுகாப்பாகவே பயணித்துள்ளேன் என்று  பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட ஸ்பெயின் நாட்டு பெண் சுற்றுலாப் பயணி  தெரிவித்துள்ளார்.

தங்களின் இருசக்கர வாகனம் மூலம் உலக நாடுகளுக்கு சுற்றுலாவாக சென்று வரும் ஸ்பெயின் தம்பதி ஜார்க்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தில்  கூடாரம் அமைத்து தங்கியிருந்தனர். கடந்த வெள்ளிக்கிழமை அன்று அந்த கூடாரத்துக்குள் புகுந்த ஒரு கும்பல் கணவரைத் தாக்கிவிட்டு அவரது மனைவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியது.

நாடு முழுவதும் அதிர்ச்சி ஏற்படுத்திய இச்சம்பவத்தில் ஈடுபட்ட 7 பேரில் 3 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ளனர்.  மீதமுள்ள 4 பேரை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்த விவகாரத்தில் சட்டபூர்வமான விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த மாநில முதல்வர் சம்பாய் சோரன் உத்தரவிட்டுள்ளார்.

பாதிப்பிற்குள்ளான பெண்ணின் கணவர்
பாதிப்பிற்குள்ளான பெண்ணின் கணவர்

இந்நிலையில் அந்தப்பெண் நேபாள நாட்டுக்கு தனது கணவருடன் நேற்று புறப்பட்டார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேசினார். "ஒட்டுமொத்த இந்திய மக்களும் மோசமானவர்களல்ல; இக்குற்றத்தில் ஈடுபட்டவா்கள்தான் தவறான எண்ணம் உடையவர்கள். கடந்த ஆறு மாதங்களாக இந்தியாவில் 20,000 கி.மீ. தூரத்துக்கும் மேலாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறோம். எங்கள் பாதுகாப்புக்கு எந்தப் பகுதியிலும் இதுபோன்ற அச்சுறுத்தல் ஏற்படவில்லை.

அனைவரும் மிகவும் கனிவுடனே நடந்து கொண்டனர். முதல்முறையாக இவ்வாறான குற்றம் நிகழ்ந்துவிட்டது. இதுபோன்ற கடினமான சூழ்நிலைகளை பெண்கள் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும்" என்று அவர் கூறினார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் கயவர்கள் சிலரால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு பாதிக்கப்பட்டாலும் இந்தியா மக்கள் மீது நம்பிக்கை வைத்து அவர் பேசியிருப்பது அவரது பெருந்தன்மையை காட்டுவதாக அமைந்திருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in