நாமக்கல் மாணவர்கள் பாதிப்பு
நாமக்கல் மாணவர்கள் பாதிப்பு

அதிர்ச்சி... சவர்மா சாப்பிட்டதால் வாந்தி, மயக்கம்; மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 12 பேர் பாதிப்பு!

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவருக்கு நேற்று நண்பர்கள் இணைந்து பிறந்தநாள் கொண்டாடியுள்ளனர். இதையடுத்து, மாணவ மாணவிகள் 12 பேர் நேற்று இரவு நாமக்கல் பரமத்தி சாலையில், பழைய நகராட்சி அலுவலகம் அருகிலுள்ள ஹோட்டல் ஒன்றில் சவர்மா சாப்பிட்டுள்ளனர். அந்த உணவு கெட்டுப்போன சிக்கனால் செய்யப்பட்டிருந்ததாக தெரிகிறது. இதனால், 12 பேருக்கும் உணவு ஒவ்வாமை ஏற்பட்டு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

இதையடுத்து, இன்று காலை அவர்கள் அணைவரும் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த பாதிகப்பட்ட மாணவ, மாணவிகளின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மருத்துவமனைக்கு திரண்டு வந்தனர். ஆனால், சாதாரண உணவு ஒவ்வாமை மட்டுமே ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் விளக்கமளித்தால் அவர்கள் அனைவரும் ஆசுவாசம் அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ச.உமா, அரசு மருத்துவமனைக்கு நேரில் வந்து மாணவ, மாணவிகளிடம் நலம் விசாரித்தார். தொடர்ந்து, தரமற்ற உணவை கொடுத்த உணவகத்திற்கும் நேரில் சென்று ஆய்வு செய்து விசாரணை நடத்தினார். இதையடுத்து, அவரது உத்தரவின் பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் அந்த ஹோட்டலை பூட்டி சீல் வைத்தனர். நேற்று இரவு அதே நேரத்தில் சாப்பிட்ட பொதுமக்களும் சிலர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

x
காமதேனு
kamadenu.hindutamil.in