துடிக்க துடிக்க 2 குழந்தைகளை எரித்துக் கொன்ற தாய்... அடுத்து எடுத்த விபரீத முடிவு!

துடிக்க துடிக்க 2 குழந்தைகளை எரித்துக் கொன்ற தாய்... அடுத்து எடுத்த விபரீத முடிவு!

கர்நாடகாவில் தனது இரண்டு குழந்தைகளை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துக் கொலை செய்த இளம்பெண்ணும், தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சித்ரதுர்கா மாவட்டம்
சித்ரதுர்கா மாவட்டம்

கர்நாடகா மாநிலம், சித்ரதுர்கா மாவட்டம் சல்லகெரேவில் உள்ள மல்லசமுத்ரா கிராமத்தைச் சேர்ந்தவர் மரக்கா(24). இவருக்கு திருமணமாகி நயனா(4), ஹர்ஷவர்தன்(2) என்ற இரண்டு குழந்தைகள் இருந்தனர்.

இந்த நிலையில், மல்லசமுத்ரா கிராமத்தின் ஒதுக்குப்புறத்தில் இன்று காலை மூன்று பேர், உடல் கருகி நிலையில் இறந்து கிடந்தனர். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், சாலக்கரை போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த சாலக்கரை போலீஸார், தீயில் கருகி கிடந்த மூன்று உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அவர்கள் விசாரணை நடத்திய போது, தீயில் கருகி உயிரிழந்தது மரக்காவும், அவரது இரண்டு குழந்தைகளும் என்பது தெரிய வந்தது. குடும்பத் தகராறு காரணமாக, தனது குழந்தைகளை வீட்டில் இருந்து அழைத்து வந்து பெட்ரோலை அவர்கள் மீது ஊற்றி தீ வைத்த மரக்கா, அதன் பின் அவரும் தீக்குளித்து இறந்து கொண்டது விசாரணையில் தெரிய வந்தது.

மூன்று பேரின் உயிரிழப்பிற்கு காரணம் குடும்பச் சண்டையா அல்லது வேறு பிரச்சினையா என சாலக்கரை போலீஸார் விசாரித்து வருகின்றனர். தனது 2 குழந்தைகளை தீ வைத்து எரித்து தாய் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

வாடிக்கையாளர்களுக்கு இன்று தான் கடைசி நாள்... பஞ்சாப் வங்கி எச்சரிக்கை!

வாயில் தீ கொண்டு ஓவியர் வரைந்த' தல' படம்... வைரலாகும் மாஸ் வீடியோ!

சவுக்கு சங்கர் மீது சாட்டையைச் சொடுக்கிய உயர் நீதிமன்றம்... வீடியோ வருமானத்தை செலுத்த உத்தரவு!

பெங்களூருவில் மீண்டும் பரபரப்பு... பள்ளி அருகே ஏராளமான வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு!

சிட்டிங் எம்பி-க்கள் 14 பேருக்கு மீண்டும் வாய்ப்பு... பரபரக்கும் திமுக வேட்பாளர் பட்டியல்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in