அதிர்ச்சி; 6வது மாடியில் இருந்து குதித்து மருத்துவ மாணவி தற்கொலை: உருக்கமான கடிதம் சிக்கியது!

பிரக்ருதி ஷெட்டி
பிரக்ருதி ஷெட்டி

உடல் பருமனாக இருந்த காரணத்தால் கர்நாடகா மாநிலத்தில் மருத்துவ மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தட்சிண கன்னடா மாவட்டம் குந்திகான் பகுதியில் செயல்பட்டு வரும் ஏ.ஜே. மருத்துவக் கல்லூரியில், பிரக்ருதி ஷெட்டி (20) என்ற மாணவி விடுதியில் தங்கி மருத்துவம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் பெரகாவி மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

நேற்று அதிகாலை 3 மணி அளவில் பிரக்ருதி ஷெட்டி திடீரென விடுதியின் 6-வது மாடியில் இருந்து கீழே குதித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பிரக்ருதி ஷெட்டி
பிரக்ருதி ஷெட்டி

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், மாணவி உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து பிரக்ருதி ஷெட்டி தங்கியிருந்த அறையில் சோதனையிட்டனர்.

அப்போது தற்கொலைக்கான காரணம் குறித்து பிரக்ருதி ஷெட்டி எழுதிய கடிதம் கிடைத்தது. அதில், தனது உடல் மிகவும் பருமனாக உள்ளது என்றும், உடல் எடையைக் குறைக்க கடுமையான பயிற்சி மேற்கொண்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், எதுவும் பலன் அளிக்காமல், அடிக்கடி உடல்நலமும் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே, விரக்தி காரணமாக தற்கொலை முடிவை தேடிக்கொள்கிறேன், என்னை மன்னித்துவிடுங்கள் என்று கடிதத்தில் எழுதி இருந்தார்.

இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமன் பிரச்சினையால் மருத்துவ மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in