
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சடையாண்டிபட்டி கிராமத்திற்கு, வெளியில் இருந்த ஊருக்குள் வந்த நாய் ஒன்று கிராமத்தில் உள்ள மற்ற நாய்களைக் கடிதத்தது. இதனால் கிராமத்தில் பல நாய்களுக்கு வெறிபிடித்துள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்நிலையில் நேற்று கிராமத்தில் விளையாடிக் கொண்டிருந்த அதே ஊரைச் சேர்ந்த ராமசாமி - நிவேதா தம்பதியின் இரண்டு வயது மகனையும், ஜெயபாண்டி - ஜோதி தம்பதியின் ஏழு வயது மகனையும் அடுத்தடுத்து நாய்கள் கடித்ததில் அவர்கள் இருவரும் படுகாயமடைந்தனர்.
சிறுவர்களின் அலறல் சத்தம் கேட்டு வெறிநாய்களிடமிருந்து சிறுவர்களை மீட்ட அக்கம் பக்கத்தினர், உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிறுவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தனது மகனை வெறிநாய் கடித்ததை கண்டு நிவேதா என்ற இளம்பெண் மயங்கி விழுந்தார். அவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வெறிபிடித்து திரியும் நாய்களைப் பிடிக்க ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் உரிய நடவடிக்கைகள் எடுத்து கிராம மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
அடுத்த அதிர்ச்சி... இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகம் மீது பாட்டில், கல்வீச்சு!
தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்வு... நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல்... ரூ.20 கோடி கேட்டு பரபரப்பு!
பிக் பாஸ் வீட்ல இந்த கூத்தெல்லாம் நடக்குது... உண்மையை போட்டுடைத்த முன்னாள் போட்டியாளர்!