கொலை
கொலை

மது அருந்தக்கூடாது என தடுத்த மனைவி...துப்பாக்கியை எடுத்த வழக்கறிஞர்: போதையில் நடந்த விபரீதம்!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் மது அருந்த வேண்டாம் என தடுத்த மனைவியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற வழக்கறிஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

லக்னோ அருகில் உள்ள தாக்கூர்கஞ்ச் பகுதியில் வசிக்கும் வழக்கறிஞர் அசோக்குமார் சௌராசியா மதுவுக்கு அடிமையான நிலையில் இருந்ததால், அவரின் மனைவி புஷ்பா சௌராசியாவுக்கும் அவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்தநிலையில், நேற்று இரவு போதையில் இருந்த அசோக் குமாரை மது அருந்தக் கூடாது என அவரது மனைவி தடுத்துள்ளார், அதைத் தொடர்ந்து அவர்கள் இடையே சண்டை வெடித்தது. இதனால் ஆத்திரத்தில் அசோக்குமார் தனது கைத்துப்பாக்கியால் அவரது மனைவியை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

ரத்த வெள்ளத்தில் மிதந்த அப்பெண்ணை மீட்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து கொலை வழக்குப்பதிவு செய்த போலீஸார், வழக்கறிஞரை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in