குண்டாஸ் உறுதி: டிஜிபியின் `ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0'

குண்டாஸ் உறுதி: டிஜிபியின் `ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0'

பள்ளிகள், கல்லூரிகளுக்கு அருகே கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருட்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ள டிஜிபி சைலேந்திரபாபு, கஞ்சா, குட்கா புகையிலை பொருட்களை விற்போர், கொள்முதல் செய்வோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அனைத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல்துறை ஆணையர்களுக்கு டிஜிபி சைலேந்திர பாபு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ஏப்ரல் 27-ம் தேதி வரை ஒரு மாதத்துக்கு ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0 நடத்தப்பட வேண்டும் என்றும் பள்ளிகள், கல்லூரிகளுக்கு அருகே கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருட்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

குட்கா, கஞ்சா கடத்துவோர், பதுக்குவோர், மொத்த கொள்முதல் செய்வோர் மீதும் கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள டிஜிபி, கஞ்சா, குட்கா பழக்கத்துக்கு அடிமையான மாணவர்களை மனநல ஆலோசகரிடம் அனுப்பி மீட்க வேண்டும் என்றும் கஞ்சா, குட்கா புகையிலை பொருட்களை விற்போர், கொள்முதல் செய்வோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே வசிப்போரை கொண்டு ஆய்வாளர் வாட்ஸ்ஆப் குழு உருவாக்கி ரகசிய தகவல் சேகரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள டிஜிபி, ஆந்திர மாநில கஞ்சா பயிரை அழிக்க அம்மாநில காவல்துறையினருடன் கூட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ரயில் நிலையங்கள், ரயில்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி கஞ்சா, குட்காவை பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

கஞ்சா, குட்கா குற்றவாளிகளை கண்காணிக்கும் பொறுப்பை காவல் நிலைய நுண்ணறிவு பிரிவு தலைமை காவலர்களுக்கு அளிக்க வேண்டும் என்றும் பார்சல் மூலம் மாத்திரை, போதை மருந்து விற்போரை கண்காணிக்க தனிப்படை அமைத்து கைது செய்ய வேண்டும் என்றும் டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in