கேரளா குண்டு வெடிப்பு... பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு!

கேரளாவில் நடந்த குண்டுவெடிப்பு
கேரளாவில் நடந்த குண்டுவெடிப்பு

கேரளா பிரார்த்தனைக் கூட்டத்தில் குண்டு வெடித்ததில் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது. இந்த நிலையில், அவதூறு பரப்பும் வகையில் பேசும் மத்திய அமைச்சர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

முதலமைச்சர் பினராயி விஜயன்
முதலமைச்சர் பினராயி விஜயன்

கேரளா மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம் கமளச்சேரியில் கிறிஸ்தவர்களின் பிரார்த்தனை கூட்டத்தில் நேற்று 3 முறை குண்டுகள் வெடித்தன. இதில் காயமடைந்து எர்ணாகுளம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 12 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது.

இந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்குப் பொறுப்பேற்று டொமினிக் மார்ட்டின் என்பவர் போலீஸில் சரணடைந்தார். அதற்கு முன்னதாக ஃபேஸ்புக் பக்கத்தில் தாம் குண்டு வெடிப்புக்கு பொறுப்பேற்பதாகவும் டொமினிக் மார்ட்டின் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

மேலும் பிரார்த்தனை கூட்டத்தை ஏற்பாடு செய்த ஜெகோவா குழுக்கள் தேசவிரோதிகள் எனவும், அந்த வீடியோவில் டொமினிக் மார்ட்டின் குற்றம்சாட்டியிருந்தார். இதனையடுத்து கைது செய்யப்பட்ட டொமினிக் மார்ட்டின் மீது ஊபா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. தேசிய புலனாய்வு ஏஜென்சி (என்ஐஏ) இந்த விசாரணையை நடத்த உள்ளது.

மேலும் கேரளா மாநில அரசும் 20 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவை விசாரணைக்காக அமைத்துள்ளது. இந்த சம்பவம் ஒட்டுமொத்தமாக நாட்டையே பெரும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக அவதூறு பேசியதாக மத்திய அமைச்சர் மற்றும் பாஜக தலைவர்களின் விமர்சனங்களுக்கு கேரளா முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அத்துடன் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் மற்றும் பாஜக தலைவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் முதல்வர் பினராயி விஜயன் எச்சரித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in