
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்த வாலிபர் கர்நாடகாவில் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் மற்றும் பொதுமக்கள் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு அக்.7-ம் தேதி தாக்குதலை நடத்தியது. இதனைத் தொடர்ந்து இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே போர் மூண்டுள்ளது. இதில் அப்பாவி பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.
இந்த நிலையில், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்த வாலிபர் இந்தியாவில் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம், ஹோஸ்பேட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆலம் பாஷா(20). இவர் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும், இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்த இந்திய அரசுக்கு எதிராகவும் வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் நேற்று வைத்ததாக கூறப்படுகிறது.
இதனால் விஜயநகர் காவல்துறையினரால் ஆலம் பாஷா இன்று கைது செய்யப்பட்டார். அவர் மீது 108 மற்றும் 151 பிரிவின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதையும் வாசிக்கலாமே...
ஹெச்.சி.எல் நிறுவனத்தில் 10,000 பேருக்கு வேலை வாய்ப்பு! மாணவர்கள் உற்சாகம்!
திருப்பதியில் பேத்தியுடன், துர்கா ஸ்டாலின் தரிசனம்!
கடும் போக்குவரத்து நெரிசல்... படப்பிடிப்புக்கு மெட்ரோவில் பயணித்த பிரபல நடிகர்!
அதிர்ச்சி... தந்தை பெரியார் திராவிடர் கழக நிர்வாகிக்கு சரமாரி வெட்டு!
நான் ஹெல்மெட் திருடவில்லை; உயிரை மாய்த்துக்கொள்வேன்... சிறப்பு எஸ்ஐ கதறல்!