
கர்நாடகாவில் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நகைக்கடை உரிமையாளரை பெண் ஒருவர் செருப்பால் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
சிக்கமகளூரு மாவட்டம் தரிகெரே டவுன் பகுதியை சேர்ந்தவர் முகமது அன்வர். இவர் அதே பகுதியில் நகைக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இவரது கடைக்கு 15 வயது மகளுடன், பெண் ஒருவர் நகை வாங்குவதற்காக வந்திருந்தார். அப்போது முகமது அன்வர் நகையை காண்பிப்பதாக கூறி, அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த சிறுமி, தனது தாயிடம் இதுபற்றி கூறினார். இதனைக் கேட்டு கோபமடைந்த அந்த பெண், நகைக்கடை உரிமையாளர் முகமது அன்வரை செருப்பால் சரமாரியாக தாக்கினார், பாதிக்கப்பட்ட சிறுமியும் அவரை செருப்பால் அடித்தார். இதை கேட்டு ஓடி வந்த பொதுமக்கள், நகைக்கடை உரிமையாளர் மீது தாக்குதல் நடத்தினர். பின்னர் இதுகுறித்து தரிகெரே போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முகமது அன்வரை கைது செய்து, அவர் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தற்போது இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.