ஆப்கானிஸ்தானில் பயங்கர குண்டுவெடிப்பு... பொறுப்பேற்றது ஐஎஸ்!

ஆப்கானிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் குண்டுவெடிப்பு
ஆப்கானிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் குண்டுவெடிப்பு

ஆப்கானிஸ்தானில் ஐஎஸ் அமைப்பினர் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 7 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக ஆளும் தலிபான் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்ததை அடுத்து, ஐஎஸ் அமைப்பினர் ஷியா பிரிவு முஸ்லிம்களை குறிவைத்து தொடர் தீவிரவாத தாக்குதல்களை நிகழ்த்தி வருகின்றனர். இந்நிலையில் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஷியா பிரிவு முஸ்லிம்கள் அதிகம் உள்ள தெருவில், விளையாட்டு உபகரணங்கள் விற்பனை செய்யும் கடையில் திடீரென வெடிகுண்டு ஒன்று வெடித்து சிதறியது. இதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த 7 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

4 பேர் பலி - 7 பேர் காயம்
4 பேர் பலி - 7 பேர் காயம்

இந்த வெடிகுண்டு தாக்குதலில் கடை முற்றிலும் சேதமடைந்ததோடு, சாலையில் பெரும் பள்ளமும் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக, ஆளும் தலிபான் அரசின் போலீஸார் தெரிவித்துள்ளனர். இதனிடையே இதற்கு பொறுப்பேற்றுள்ள ஐஎஸ் அமைப்பு, சூட்கேஸ் வெடிகுண்டு மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அறிவித்துள்ளது.

குண்டுவெடிப்பிற்கு ஐஎஸ் அமைப்பினர் பொறுப்பேற்பு
குண்டுவெடிப்பிற்கு ஐஎஸ் அமைப்பினர் பொறுப்பேற்பு

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in