கணவன் - மனைவி
கணவன் - மனைவி

அதிர்ச்சி! சித்தப்பா மகனுடன் தகாத உறவு; கண்டித்த கணவனை எரித்துக்கொன்ற மனைவி

அரியலூரில் சித்தப்பா மகனுடன் முறை தவறிய உறவில் இருந்த மனைவியை கணவன் கண்டித்ததால் தனது ஆண் நண்பருடன் இணைந்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கைதான வேல்முருகன்
கைதான வேல்முருகன்

அரியலூரில் வனத்துறைக்குச் சொந்தமான முந்திரி காட்டில் கடந்த வாரம் மனித உடல் ஒன்று எரிந்துக் கொண்டிருப்பதை பார்த்து அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவம் இடத்திற்கு உடனடியாக வந்த போலீஸார் தீயை அணைத்து உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், அரியலூர் மாவட்டம் வடகடல் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரின் சடலம் என்றும், சென்னையில் கோயம்பேடு மார்க்கெட்டில் பூ கட்டும் தொழில் செய்து வந்துள்ளார் என்றும் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் சுரேஷுக்கும் அவரது மனைவி அனுப்பிரியாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொலை
கொலை

சுரேஷ் மனைவி அனுப்பிரியாவிற்கும், அதே பகுதியைச் சேர்ந்த அவரது சித்தப்பா மகன் வேல்முருகன் என்பவருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த வாரம் சென்னையிலிருந்து கணவர் சுரேஷை ஊருக்கு வரவழைத்து, அங்கிருந்து விடியற்காலையில் தனது இரு சக்கர வாகனத்தில் கொலை செய்யப்போகும் இடத்துக்கு கூட்டிச்சென்றுள்ளார் அனுப்பிரியா. இடம் வந்தவுடன், மயக்கம் வருவது போல் உள்ளது என பைக்கை நிறுத்தி நாடகம் ஆடியுள்ளார் அனுப்பிரியா.

இதனையடுத்து அங்குப் பதுங்கியிருந்த வேல்முருகன், சுரேஷ் சுதாரிப்பதற்குள் சரமாரியாக அவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துள்ளார். பின்னர் அவரது உடலை வெண்மான்கொண்டான் பகுதியில் உள்ள முந்திரி காட்டில் சாக்குப் பையில் மூட்டை கட்டிப் போட்டுள்ளனர். மறுநாள் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர். தொடர்ந்து கொலையை மறைக்க, இறந்த சுரேஷின் செல்போனை சென்னைக்கே கொண்டுவந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து இறந்த சுரேஷின் மனைவி அனுப்பிரியா மற்றும் அவருடைய ஆண் நண்பர் வேல்முருகன் இருவரையும் போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அண்ணன் முறை உறவுக்காரருடன் தகாத உறவு வைத்துக் கொண்டு கணவனையே மனைவி கொலை செய்துள்ள சம்பவம் அரியலூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

HBD AMBIKA| ‘முதல் மரியாதை’ மீது அம்பிகாவுக்கு வந்த பொறாமை!

தீபாவளி கொண்டாட்டம்... 16,895 பேருந்துகள் இயக்கம்... எந்தெந்த ஊர்களுக்கு எங்கிருந்து? முழு விபரம்!

அதிர்ச்சி... பெண் அதிகாரி கழுத்தறுத்து கொலை! மர்ம கும்பல் வெறிச்செயல்

பிரபல ரவுடி வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு! உயிர் தப்பிய குடும்பம்

அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் 4வது நாளாக தொடரும் ஐடி ரெய்டு!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in