'மது குடிக்காதீங்க' எனக் கண்டித்த மனைவி கொலை... மரத்தில் தூக்கில் தொங்கிய கணவன்!

லட்சுமவ்வா, நிங்கப்பா
லட்சுமவ்வா, நிங்கப்பா

குடும்பத் தகராறு காரணமாக மனைவியை வயல் வெளியில் ஓட ஓட விரட்டிக் கொலை செய்த கணவர், அங்கிருந்த மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், கொப்பலில் உள்ள புதசெட்னாவைச் சேர்ந்தவர் நிங்கப்பா (45). இவரது மனைவி லட்சுமவ்வா (40). குடிப்பழக்கம் உள்ள நிங்கப்பா, அடிக்கடி மது அருந்தி விட்டு வந்து தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதன் காரணமாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஊரில் உள்ள வயல் வெளியில் இன்று காலை லட்சுமவ்வா கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். அதன் அருகில் இருந்த மரத்தில் நிங்கப்பா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருந்தார். இதைப் பார்த்த கிராம மக்கள், உடனடியாக போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீஸார், இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், குடும்பத் தகராறில் நேற்று இரவு வயலில் மனைவியை ஓட ஓட விரட்டி நிங்கப்பா கொலை செய்தது தெரிய வந்தது. இதன்பின் அருகில் இருந்த மரத்தில் நிங்கப்பா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதும் விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். குடியின் காரணமாக கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்சினை இருவரின் உயிரிழப்புக்கு காரணமாகி விட்டதாக கிராம மக்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in