ஷாக்... தேநீர் கொண்டு வர தாமதம்: மனைவியின் தலையைத் துண்டித்து கொலை செய்த கொடூர கணவர்!

கொலை செய்யப்பட்ட சுந்தரி தேவி
கொலை செய்யப்பட்ட சுந்தரி தேவி
Updated on
2 min read

இன்று காலையில் தேநீரை காலதாமதமாக கொண்டு வந்த மனைவியின் கழுத்தை மகனின் கண்முன்னே வாளால் அவரது கணவர் துண்டித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 காஜியாபாத்
காஜியாபாத்

உத்தரப்பிரதேச மாநிலம், காஜியாபாத்தில் உள்ள போஜ்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஃபசல்கர் கிராமத்தைச் சேர்ந்தவர் தரம்வீர்(60). இவரது மனைவி சுந்தரி தேவி(50). இந்த தம்பதியருக்கு மூன்று மகன்கள் உள்னர்.

தரம்வீருக்கு அடிக்கடி தேநீர் குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இன்று காலை வீட்டில் இளைய மகன் உறங்கிக் கொண்டிருந்தார். மற்றொருவர் அருகில் உள்ள குழாயில் தண்ணீர் எடுக்கச் சென்றிருந்தார்.

கொலை
கொலை

இந்த நிலையில், சுந்தரியிடம் தரம்வீர் இன்று காலை 6 மணியளவில் தேநீர் கேட்டுள்ளார். அடிக்கடி தேநீர் குடிப்பது உடல்நலத்திற்கு நல்லதல்ல என சுந்தரி கூறியுள்ளார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த தரம்வீர், வாளால் சுந்தரியைத் தாக்கினார். அதை அவரது மகன் தடுத்துள்ளார். ஆனால், சுந்தரியின் தலையைத் துண்டித்துக் கொன்று விட்டு அங்கிருந்து தரம்வீர் அங்கிருந்து தப்பித்து ஓடினார். அவரைப் பிடிக்க முயன்ற பக்கத்து வீட்டுக்காரரை மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டார்.

இதுகுறித்து அவரது மூத்த மகன் கொடுத்த புகாரின் பேரில், போஜ்பூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாகியுள்ள தரம்வீரை தேடி வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து ஏசிபி ஞானபிரகாஷ் ராய் கூறுகையில், "காலையில் தேநீர் குடிப்பதில் ஏற்பட்ட தகராறு சண்டையாக மூண்டது. இதனால் ஆத்திரமடைந்த தரம்வீர், வாளால் தனது மனைவியை வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பியோடிவிட்டார். விரைவில் அவரை கைது செய்வோம்" என்றார்.

தேநீர் கொண்டு வர தாமதமானதால் மகன் கண்முன் மனைவியை தலையைத் துண்டித்து கணவர் படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in