அதிர்ச்சி... அரசு பள்ளி வகுப்பறை பூட்டுகளில் மனித மலம் பூச்சு! மாணவிகள் போராட்டம்!

மாணவிகள் போராட்டம்
மாணவிகள் போராட்டம்

திருத்தணி அருகே அரசு பள்ளி வகுப்பறை பூட்டுகளில் மனித மலம் பூசப்பட்டதைக் கண்டித்தும், குடிநீர் தொட்டி சேதப்படுத்தப்பட்டதைக் கண்டித்தும் பள்ளி மாணவ, மாணவிகள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.

மாணவர்கள் போராட்டம்
மாணவர்கள் போராட்டம்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே மத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 400க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் படித்து வருகின்றனர். மாணவர்களுக்கு ஏற்ப பள்ளி கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் குறுகலான இடத்தில் மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில், பள்ளி வகுப்பறைகளுக்கு இரும்பு கேட் பூட்டப்பட்டிருந்த நிலையில் மர்ம நபர்கள், வகுப்பறைகளின் பூட்டுக்களில் மலம் பூசியும், குடிநீர் தொட்டியை உடைத்தும் சென்றிருக்கின்றனர். இந்த சம்பவம் மாணவர்கள் மற்றும் கிராம மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

பெற்றோர்கள் போராட்டம்
பெற்றோர்கள் போராட்டம்

இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து பெற்றோருடன் பள்ளி வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் குதித்தனர். பள்ளிக்கு போதுமான கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் பள்ளி மாணவர்களிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருவதாகவும், அடிக்கடி மர்மநபர்கள் பள்ளியில் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவது தொடர்பாக பலமுறை புகார் செய்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டினர்.

தமிழ்நாடு அரசு உடனடியாக பள்ளிக்கு உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் மலம் தடவிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in