தெலங்கானாவில் இன்று நேரிட்ட சாலை விபத்தில் இடைநிலை கல்வி பயிலும் 4 மாணவர்கள் உயிரிழந்தனர். நேற்று தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் நிகழ்ந்த இந்த விபத்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம், வாரங்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எம்.சித்து, பி.கணேஷ், வருண் தேஜ், பி.ரணில் குமார். இவர்கள் 4 பேரும் இடைநிலை கல்வி பயின்று வந்தனர். அம்மாநிலத்தில் இடைநிலை கல்வி என்பது 11 மற்றும் 12-ம் வகுப்பை குறிக்கிறது. இவர்கள் நால்வருமே 17 வயது பிரிவினர் ஆவர்.
இந்நிலையில் தெலங்கானா இடைநிலை கல்வி தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் தேர்ச்சி பெற்றதைத் தொடர்ந்து 4 மாணவர்களும் தேர்வு வெற்றியை உற்சாகமாக கொண்டாடினர். நேற்று இரவு 4 மாணவர்களும் ஒரே பைக்கில் ஹோட்டலுக்குச் சென்று உணவருந்திவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
வாரங்கல் - கம்மம் நெடுஞ்சாலையில் உள்ள வர்தன்னபேட்டை புறநகர் பகுதியில் வந்தபோது மாணவர்கள் சென்ற பைக், எதிரே வந்த தனியார் பேருந்து மீது மோதியது. இந்த விபத்தில் 3 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
படுகாயமடைந்த மற்றொரு மாணவர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். தேர்வில் வெற்றி பெற்றதை கொண்டாடிய மாணவர்கள், விபத்தில் உயிரிழந்த சம்பவம் தெலங்கானாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
கைதானவங்க நம்மாளுங்க தான்; ஆனா ரூ.4 கோடி எனதில்லை... நயினார் நாகேந்திரன் விளக்கம்!
அதிர்ச்சி... ஜிஎஸ்டி அலுவலகத்தில் அதிகாரியின் மண்டை உடைப்பு: சென்னையில் பரபரப்பு!
நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு... நாட்டின் கவனம் ஈர்க்கும் நட்சத்திரத் தொகுதிகள் இவைதான்!
முன்பு முதலை, இப்போது சிறுத்தை... படுகாயங்களுடன் உயிர் பிழைத்த முன்னாள் கிரிக்கெட் வீரர்!