விஷமாகும் அசைவ உணவுகள்... 45 கிலோ சிக்கன் பறிமுதல்! அதிகாரிகள் அதிரடி!

கடலூரில் உணவு பாதுகாப்புத்துறை சோதனை
கடலூரில் உணவு பாதுகாப்புத்துறை சோதனை

கடலூரில் செயற்கை வண்ணம் கலந்த 45 கிலோ சிக்கன் உணவு வகைகளை, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கடலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் கைலாஷ் குமார் தலைமையில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், கடலூர் பேருந்து நிலையத்தில் உள்ள உணவகங்களில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 3 உணவகங்களில், முந்தைய நாள் சமைத்த கோழி இறைச்சியில், மீதமிருந்த 5 கிலோ இறைச்சியை, அடுத்த நாள் விற்பனை செய்வதற்காக குளிர்சாதன பெட்டியில் பதப்படுத்தி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அந்த கோழி இறைச்சியை பறிமுதல் செய்து அதிகாரிகள் அழித்தனர்.

செயற்கை நிறமூட்டப்பட்ட சிக்கன் பறிமுதல்
செயற்கை நிறமூட்டப்பட்ட சிக்கன் பறிமுதல்

இதேபோல் செயற்கை நிறமூட்டி கலந்து சமைப்பதற்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 40 கிலோ கோழி இறைச்சியை பறிமுதல் செய்து அழித்தனர். இதையடுத்து 3 கடைகளுக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதுடன், தலா ரூ.2 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

அப்போது மக்களுக்கு ஆரோக்கியமான செயற்கை வண்ணங்கள் இல்லாத உணவு வகைகளை தயாரித்து வழங்க வேண்டும் எனவும் உணவு பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்காத கடை உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டது.

செயற்கை உணவு நிறமூட்டிகள்
செயற்கை உணவு நிறமூட்டிகள்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in