அதிர்ச்சி... மகனை உருட்டுக்கட்டையால் அடித்துக்கொன்ற தந்தை!

கொலை
கொலை

மகாராஷ்டிர மாநிலம் சகாப்பூரில் மகனை உருட்டுக்கட்டையால் அடித்துக் கொன்ற தந்தையை போலீஸார் கைது செய்தனர். கொலை செய்யப்பட்டவரின் தம்பியும் கைது செய்யப்பட்டார்.

தானே மாவட்டம் சகாப்பூர் தாலுகா அகாய் கிராமத்தை சேர்ந்தவர் மதுக்கர் ஜாதவ் (55). இவரது மகன்கள் ராம் (35), விஷ்ணு (27). கடந்த 16-ம் தேதி இரவு ராம் தம்பியின் மனைவி குறித்து அவதூறாக பேசியதாக தெரிகிறது. இதனை கேட்ட தந்தை மதுக்கர் ஜாதவ் அவரிடம் தகராறு செய்தார்.

கொலை
கொலை

இதனால் இருவருக்குமிடையே தகராறு முற்றியது. இதில் ஆத்திரமடைந்த மதுக்கர் ஜாதவ் தனது தனது 2-வது மகன் விஷ்ணுவுடன் சேர்ந்து உருட்டுக்கட்டையால் ராமை தாக்கினார். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த ராம் மண்டை உடைந்து சிறிது நேரத்தில் உயிரிழந்தார். இது பற்றி தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று ராமின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீஸார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். கடந்த 17-ம் தேதி மதுக்கர் ஜாதவ், மகன் விஷ்ணுவை கைது செய்தனர். தந்தையே மகனை அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in