பாட்டு கேட்டபோது விபரீதம்: ப்ளூடூத் ஹெட்போன் வெடித்ததில் முதியவர் படுகாயம்

ப்ளூடூத் ஹெட்போன் வெடித்து முதியவர் படுகாயம்
ப்ளூடூத் ஹெட்போன் வெடித்து முதியவர் படுகாயம்

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே முதியவர் ப்ளூடூத் ஹெட்போன் அ ணிந்து பாட்டு கேட்டுக் கொண்டிருந்தபோது, ஹெட்போன் திடீரென வெடித்ததில் முதியவர் காதில் பலத்த காயம் ஏற்பட்டது.

நாம் பலரும் பெரும்பாலான நேரங்களில் மொபைல்போன் அல்லது மடிக்கணினிகளில் ஹெட்போன்களை வாயிலாக பாடல் கேட்பது, போனில் பேசுவது, திரைப்படங்கள் போன்ற செயல்களில் ஈடுபடுகிறோம். அதிக நேரம் ஹெட்போன் பயன்படுத்துவது, தரமற்ற ஹெட்போன் சாதனங்களின் பயன்பாடு போன்றவற்றால் நமது காதுகளின் திறனை பாதிப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

ப்ளூடூத் ஹெட்போன்
ப்ளூடூத் ஹெட்போன்

இந்நிலையில் ப்ளூடூத் ஹெட்போனில் பாட்டு கேட்டுக் கொண்டிருந்தபோது, ஹெட்போன் வெடித்து முதியவரின் காதில் ரத்தக் காயம் ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே உள்ளது மாத்துக்கண்மாய் கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி பன்னீர்செல்வம் (55).

இவர், நேற்று முன்தினம் இரவு, தனது வீட்டில் ப்ளூடூத் ஹெட்போன் அணிந்து பாட்டு கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென ப்ளூடூத் ஹெட்போன் வெடித்துச் சிதறி, முதியவர் பன்னீர்செல்வம் காது பகுதியில் பலத்த ரத்த காயம் ஏற்பட்டது.

ஹெட்போன் வெடித்து முதியவர் படுகாயம்
ஹெட்போன் வெடித்து முதியவர் படுகாயம்

இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை ஆசுவாசப்படுத்தி முதியவர் பன்னீர்செல்வத்தை சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இன்று மொபைல் போன், ஹெட்போன் பரவலாக எல்லோராலும் பயன்படுத்தப்படும் சாதனங்களாக உள்ள நிலையில் அவற்றை பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்த விழிப்பணர்வு ஏற்படுத்த வேண்டிய அவசியத்தை இந்த சம்பவம் உணர்த்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in