வீடு புகுந்து மனைவி, காதலன் வெட்டிக் கொலை: முன்னாள் கணவர் வெறிச்செயல்!

கொலை செய்த தௌபிக் காடி, கொலையான ஹீனகௌசர், யாசின் பகோட்
கொலை செய்த தௌபிக் காடி, கொலையான ஹீனகௌசர், யாசின் பகோட்

திருமணமான நான்கு மாதத்தில் தன்னை விட்டுப் பிரிந்த மனைவி, மற்றும் அவரது காதலனை முன்னாள் கணவர் வெட்டிக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாவட்டம், பெல்காம் மாவட்டம், அத்தானி தாலுகாவில் உள்ள கொக்கடனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தௌபிக் காடி(24). இவருக்கு கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு ஹீனகௌசர் சுதரனே(19) என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் திருமணமான ஒரு மாதத்தில் கணவரை விட்டு பிரிந்து காதலன் யாசின் பகோட்(21) என்பவருடன் ஹீனகௌசர் சுதரனே வீட்டு விட்டு வெளியேறினார்.

கொலை
கொலை

இதுதொடர்பாக ஒன்றரை மாதங்களுக்கு முன்பு கிராம பெரியவர்கள் முன்னிலையில் பஞ்சாயத்து நடைபெற்றது. அப்போது தனது கணவருடன் வாழமாட்டேன் என்றும், காதலனுடன் தான் சேர்ந்து வாழ்வேன் என்று ஹீனகௌசர் சுதரனே திட்டவட்டமாக சொன்னார். இதனால் கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்தனர்.

இந்த நிலையில், யாசினை ஹீனாகௌசருக்கு ஊர் பெயரிவர்கள் திருமணம் செய்து வைத்தனர். இதனால், தனது மனைவி மற்றும் அவரது காதலன் மீது தௌபிக் ஆத்திரத்தில் இருந்தார். நேற்று இரவு யாசின் வீட்டிற்கு அரிவாளுடன் சென்ற தௌபிக், தன் முன்னாள் மனைவி ஹீனகௌசரை சரமாரியாக வெட்டினார்.

அத்துடன் அவரது காதலன் யாசினையும் வெட்டினார். அவர்களைக் காப்பாற்ற வந்த அமினாபாய் பகுடா, மாமனார் முஸ்தபா முல்லா ஆகியோரையும் தௌபிக் அரிவாளால் வெட்டி விட்டுத் தப்பியோடி விட்டார்.

இதுகுறித்த தகவல் அறிந்த போலீஸார் விரைந்து வந்து பார்த்த போது, யாசின், ஹீனாகௌசர் ஆகியோர உயிரிழந்து கிடந்தனர். படுகாயங்களுடன் இருந்த அமினாபாய், முஸ்தபா ஆகியோரை மீட்டு மிராஜில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த இரட்டைக் கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார், தௌபிக்கை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in