நடுரோட்டில் பரபரப்பு... போலீஸார் அபராதம் விதித்ததால் ஆட்டோவுக்கு தீ வைத்த ஓட்டுநர்!

ஆட்டோவுக்கு தீ வைக்கும் முஹம்மது அன்சார்.
ஆட்டோவுக்கு தீ வைக்கும் முஹம்மது அன்சார்.
Updated on
1 min read

சீருடை அணியாததால் 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததால் ஆட்டோவுக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்த ஓட்டுநரால் பரபரப்பு ஏற்பட்டது.

கர்நாடகா மாநிலம், தட்சிண கன்னடா மாவட்டம், பந்த்வாலாவைச் சேர்ந்தவர் முஹம்மது அன்சார். இவர் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்கிறார். இவர் நேற்று இரவு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் சீருடை அணியவில்லை என்று கூறப்படுகிறது. அத்துடன் அலைபேசியில் பேசியவாறு ஆட்டோவை ஓட்டியுள்ளார்.

இதைப் பார்த்த போக்குவரத்து காவலர்கள், முஹம்மது அன்சார் ஆட்டோவை தடுத்து நிறுத்தியுள்ளனர். அத்துடன் போக்குவரத்து விதிகளை மீறியதாகக் கூறி அவருக்கு 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். இதனால் போக்குவரத்து காவலர்களுடன் முஹம்மது அன்சார் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நீங்கள் கூடத்தான் சீட்பெல்ட் அணியாமல் வாகனத்தை ஓட்டி வந்தீர்கள், உங்களுக்கு யார் அபராதம் விதிப்பது என்று போலீஸாரிடம் கேள்வி எழுப்பினார்.

அத்துடன் அபராதம் விதிக்கப்பட்டதற்கு பணம் தரமாட்டேன் என்றவர், பெட்ரோலை ஊற்றி ஆட்டோவிற்கு அவர் தீ வைக்க ஆரம்பித்தார். இதை போலீஸார் தடுத்தனர். அதற்கு இது என்னுடைய ஆட்டோ, என்னிடம் பணம் இல்லை. எனவே, தீ வைக்கிறேன் என்றார். ஆனாலும், போலீஸார் அவரைத் தடுத்தனர்.

இதனால் ஆத்திமடைந்த முஹம்மது அன்சார், போலீஸார் வந்த வாகனத்தின் மீதும் பெட்ரோலை ஊற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. தீயை வைக்க விடாமல் அவரைப் பிடித்து போலீஸார் பந்த்வாலா நகர் காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in