கோயம்பேட்டில் மோதல்: காயத்ரி ரகுராம் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு

விசிகவினர் 30 பேர் வழக்கு பதிவு
கோயம்பேட்டில் மோதல்: காயத்ரி ரகுராம் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு

சென்னை கோயம்பேடு பஸ் நிலையம் அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கும்போது ஏற்பட்ட தகராறு தொடர்பாக நடிகை காயத்ரி ரகுராம் உட்பட 150 பாஜவினர் மீதும், விசிக 30 பேர் மீதும் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அம்பத்கரின் 132வது பிறந்த தினத்தை முன்னிட்டு சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் முன்பு அமைக்கப்பட்டுள்ள அவரது சிலைக்கு நேற்று முன்தினம் விடுதலை சிறுத்தைகள் கட்சி உட்பட பல்வேறு கட்சிகள் சார்பில் மாலை அணிவிக்கப்பட்டது.

அதேபோல் பாஜ சார்பில் நடிகை காயத்ரி ரகுராம் தலைமையில் 150க்கும் மேற்பட்டோர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்தனர். அப்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கொடிகளுடன் இணைத்து பாஜ கொடிகளை கட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதை கண்டித்து இருதரப்பினரும் 100 அடி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதைதொடர்ந்து பாஜ மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் சார்பில் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி, கோயம்பேடு பேருந்து நிலைய காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி நடிகை காயத்ரி ரகுராம் உட்பட 150 பாஜவினர் மீது ஐபிசி 147, 148, 294(பி), 324, 506(2) ஆகிய 5 பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். அதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் 30 பேர் மீது வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in