பகீர்... என் சாவுக்கு காங்கிரஸ் எம்எல்ஏ தான் காரணம்... கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்த வாலிபர்!

நிதின் பார்மர்
நிதின் பார்மர்

குஜராத்தில் 28 வாலிபர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தன் சாவுக்கு மாமியாரும், காங்கிரஸ் எம்எல்ஏவும் தான் காரணம் என அவர் எழுதி வைத்துள்ள கடிதம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போலீஸ் விசாரணை
போலீஸ் விசாரணை

குஜராத் மாநிலம் ஜூனாகத் மாவட்டம் சோர்வாட் கிராமத்தைச் சேர்ந்தவர் நிதின் பார்மர்(28). இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் மர்மமான முறையி தூக்கிட்டு இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார், அவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதன் பின் அவரது வீட்டைச் சோதனை செய்த போது ஒருகடிதம் சிக்கியது. அதில், தனது தற்கொலைக்கு மாமியார் மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏ விமல் சுதாசமா தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இறந்த நிதின் காங்கிரஸ் எம்எல்ஏ விமல் சுதாசமா நெருங்கிய உறவினர் என்று கூறப்படுகிறது.

ஆனால், இந்த குற்றச்சாட்டை காங்கிரஸ் எம்எல்ஏவான சுதாசமா திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "இது தற்கொலை அல்ல.கொலை போலத் தெரிகிறது ஆனால், யாரே என்னை அவதூறு செய்ய தற்கொலை போல காட்ட முயற்சிக்கிறார்கள். தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிதின், கடந்த 2 ஆண்டுகளாக என்னிடம் பேசவே இல்லை. அவர் என் அத்தையின் மகன். அவர் கொல்லப்பட்டதாக அவரது குடும்பத்தினர் நம்புகின்றனர். அரசியலில் என்னைக் களங்கப்படுத்த யாரோ செய்த சதி இது" என்றார்.

இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். நிதின் தற்கொலை செய்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே தெரிய வரும் என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குஜராத் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in