சென்னையில் பரபரப்பு: காவலரை பிளேடால் வெட்டிய கல்லூரி மாணவர்கள்!

கைது
கைது

சென்னையில் காவலரை பிளேடால் வெட்டிய கல்லூரி மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக இருக்கும் மேலும் ஒருவரைத் தேடிவருகின்றனர்.

சென்னை அண்ணாசாலையில் உள்ள ஒரு சலூன் கடை அருகே பாலாஜி என்ற காவலர் நின்றுக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கல்லூரி மாணவர்கள் சிலர் அவரிடம் தகராறில் ஈடுபட்டனர். ஒருகட்டத்தில் பிளேடால் காவலர் பாலாஜியின் கழுத்து, கைகளில் சரமாரியாக வெட்டினர். இதில் காயமடைந்த பாலாஜி, அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதனிடையே பிளேடால் காவலரை வெட்டிவிட்டு தப்பியோடிய கல்லூரி மாணவர்களான சையது சாலா ஹத், சையது பயாஸ் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். இதேபோல் தப்பி ஓடிய மற்றொரு மாணவரான சையது ரபீக்கை போலீஸார் தேடிவருகின்றனர்.

கல்லூரி மாணவர்கள், காவலரிடமே தகராறு செய்து தாக்குதலில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in