2 அடி நிலத்துக்கு தகராறு; இருதரப்பினரிடையே பயங்கர மோதல்: அதிமுக பிரமுகர் உட்பட 10 பேர் மீது வழக்குப் பதிவு!

2 அடி நிலத்துக்கு தகராறு; இருதரப்பினரிடையே பயங்கர மோதல்: அதிமுக பிரமுகர் உட்பட 10 பேர் மீது வழக்குப் பதிவு!

வாணியம்பாடி அருகே நிலத் தகராறு தொடர்பாக இரு தரப்பினருக்குமிடையே ஏற்பட்ட மோதலில் 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் அதிமுக கிளைச் செயலாளர் உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த ஆலங்காயம் அருகே உள்ள வெள்ளக்குட்டை புதிய காலனி தெருவை சேர்ந்த கூலித் தொழிலாளி ஏகாம்பரம். அதே பகுதியைச் சேர்ந்தவர் மோகன்தாஸ். இருவரும் அருகருகே வீடு கட்டி வசித்து வருகின்றனர். இந்நிலையில் மோகன்தாஸுக்குச் சொந்தமான 2 அடி இடத்தை ஏகாம்பரம் ஆக்கிரமித்துள்ளதாகக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து தகவல் அறிந்து மோகன்தாஸ் உறவினர்களான அதிமுக கிளை செயலாளர் வழக்கறிஞர் பாபு, அருள்தாஸ், ராமதாஸ் உள்ளிட்ட 7 பேர் கொண்ட கும்பல் ஏகாம்பரம் மற்றும் அவருடைய குடும்பத்தினரான சுகுமார், கிருஷ்ண மூர்த்தி, கவிதா உள்ளிட்டோரைக் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் பலமாகத் தாக்கியுள்ளனர்.

இதனால் படுகாயமடைந்த ஏகாம்பரம் குடும்பத்தினரை மீட்ட அப்பகுதியினர் ஆம்புலன்ஸ் மூலம் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இந்த மோதலில் 7 பேர் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இருதரப்பினரின் மோதல் காட்சிகள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த சம்பவம் குறித்து ஆலங்காயம் காவல் நிலைய போலீஸார் இரு தரப்பிலும் 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in