
வீட்டிலிருந்தபடியே லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம் என கூறி பலரிடம் பான் கார்டு, ஆதார் கார்டு, சேகரித்து பணத்தை ஏமாற்றிய நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
சென்னை பாடி, சத்யா நகர், மூர்த்தி தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக்(36). இவர் டெலிகிராம் ஆப் வாயிலாக வேலைவாய்ப்பு தொடர்பான விளம்பரத்தை பார்த்த அவர், அதில் இருந்த எண்ணிற்கு அழைத்து பேசியுள்ளார். அப்போது அவர்கள், வீட்டிலிருந்தபடியே லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம் என்று கூறியுள்ளனர். அதற்கு தேவையான ஆவணங்களான பான் கார்டு, ஆதார் கார்டு, ஆகியவற்றை சேகரித்து, குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்தும்படி கூறியுள்ளனர்.
அதன்படி அவரை ஏமாற்றி 10 லட்சம் ரூபாய் மோசடி செய்தனர். அதன் பின் அந்த டெலிகிராம் முகவரி முற்றிலும் செயலிழந்து விட்டதை கண்ட கார்த்திக் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து விசாரித்த ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீஸார், டெலிகிராம் ஆப் வாயிலாக, பகுதிநேர வேலை தேடுபவர்களை குறி வைத்து, ஆசை வார்த்தை கூடி மோசடியில் ஈடுபட்டது, குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் பணம் செலுத்த சொல்லி ஏமாற்றியது, சென்னை தியாகராய நகர், உஸ்மான் ரோடு பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவரின் வங்கிக் கணக்கென கண்டுபிடித்தனர்.
அவரை இணையதள குற்றப்பிரிவு போலீஸார் விசாரணைக்கு அழைத்த போது, இணையதளம் வாயிலாக மிகப் பெரிய ஆன்லைன் மோசடி நடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இணையதள குற்றவாளிகளான சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த விவேகானந்தன், சென்னை சேத்துப்பட்டை சேர்ந்த ஹலிக்குள் ஜமால், சென்னை நங்கநல்லூர், வி.வி.நகரைச் சேர்ந்த அஷ்கர் ஷெரிப் ஆகியோரை பிடித்து விசாரணை செய்ததில், மூவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். மேலும் இந்த மோசடியில் தங்களுக்கு கமிஷன் தொகை மட்டுமே கிடைக்கும் என தெரிவித்தனர்.
இந்த மோசடி கும்பல் வேலை இல்லாதவர்களிடம் ஆன்லைன் வாயிலாக வசூலிக்கும் பணம், அவர்களின் பான் கார்டு மற்றும் ஆதார் கார்டை பயன்படுத்தி புதிய வங்கிக் கணக்கு ஒன்றை துவங்கி, அதில் இருந்து சீனா கேம்ப்லிங் ஆப் மற்றும் இதர ஆன்லைன் மோசடி குற்றங்கள் செய்யும் உரிமையாளர்கள் வாயிலாக அமெரிக்க வங்கிக் கணக்குகளுக்கு பணம் மாற்றம் செய்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த இணைய குற்றவாளிகளை கண்டுபிடித்ததன் வாயிலாக, சூதாட்ட ஆப் மோசடி ஆசாமிகளின் சூழ்ச்சி செயல் தடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட சிம்கார்டுகள் மடிக்கணினி, 5 செல்போன் போன்றவற்றை பறிமுதல் செய்தனர். அவர்கள் மூவரையும் கைது செய்த மத்திய குற்றப்பிரிவு போலீஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் வாசிக்கலாமே...
வில்வித்தை போட்டியில் கை இல்லாத இந்திய வீராங்கனை ஷீத்தல் தங்கம் வென்று சாதனை
நீட் விலக்கு மசோதா... நேரடியாக குடியரசுத் தலைவரிடமே முதல்வர் வலியுறுத்தல்!
3 அடி உயரம்... 250 கிலோ எடை... ரஜினிக்கு சிலை அமைத்து குடும்பத்துடன் வழிபடும் ரசிகர்!
5 வருடமாக படுத்தப் படுக்கையாக இருக்கும் பிரபல இயக்குநரின் மனைவி... கண்டுகொள்ளாத திரையுலகம்!
நவம்பர் மாதம் 14 நாட்கள் வங்கி விடுமுறை... பணிகளை முன்பே திட்டமிடுங்க!