
மத்திய பிரதேச மாநிலத்தில் மத்திய அமைச்சர் பிரஹலாத் படேல் பயணித்த கார் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார், அமைச்சர் உட்பட 3 பேர் காயமடைந்துள்ளனர்.
மத்தியப் பிரதேச சட்டப்பேரவைக்கு 17-ம் தேதி தேர்தல் நடக்கிறது. சிந்த்வாரா சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் தலைவர் கமல்நாத்துக்கு எதிராக பாஜக வேட்பாளர் பூந்தி சாஹூ போட்டியிடுகிறார். அவருக்காக சிந்த்வாராவில் மத்திய உணவு பதப்படுத்தல் துறை அமைச்சர் பிரஹலாத் படேல் பிரச்சாரம் செய்தார். பின்னர், அங்கிருந்து நரசிங்கபூருக்கு அமைச்சர் காரில் திரும்பிக் கொண்டிருந்தார். நரசிங்கபூர் தொகுதியில் பிரஹலாத் படேல் போட்டியிடுகிறார்.
அமர்வாரா என்ற இடத்தில் நடந்த விபத்தில் அமைச்சரின் கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த நிரஞ்சன் சந்திரவன்ஷி என்பவர் உயிரிழந்தார். இந்த விபத்தில் அமைச்சர் பிரஹலாத் படேல் லேசான காயமடைந்தார். மேலும் 3 பேரும் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்துக்குப் பின்பு பேசியிருக்கும் மத்திய அமைச்சர் பிரஹலாத் படேல், "இன்றைய சம்பவம் நெஞ்சைப் பதற வைக்கிறது. எனது ஓட்டுனர் சாமர்த்தியமாக எங்களைக் காப்பாற்ற முயன்றார். அவருடைய முயற்சியால் நாங்கள் காப்பாற்றப்பட்டோம். ஆனால் ஒருவர் இறந்த செய்தி மிகவும் வருத்தமாக இருக்கிறது. அவரது குடும்பத்திற்காக நான் பிரார்த்திக்கிறேன்" என்றார்.
தகவல் தெரிந்ததும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுமாறு மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கூறினார் என்றும் அமைச்சர் படேல் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...
கோடிக்கணக்கில் பணம், தங்கம், வைரம் பறிமுதல்... தெறிக்கவிட்ட தேர்தல் பறக்கும் படை!
அதிர்ச்சி! தவறான சிகிச்சையால் +2 மாணவன் உயிரிழப்பு... மருத்துவர் கைது!
80 வயது முதியவரை 26 வயது இளைஞனாக்கலாம்… விஞ்ஞானிகள் சாதனை!
தேனியில் பரபரப்பு.. கவுன்சிலர்களின் பிச்சை எடுத்து போராட்டம்!
பிக் பாஸ் நிக்சனின் சில்மிஷ வீடியோ... போட்டியாளர்கள் அதிர்ச்சி!