ஏற்காட்டில் பேருந்து கவிழ்ந்து பயங்கர விபத்து... 4 பேர் பலி; 20 பேர் படுகாயம்

ஏற்காட்டில் பேருந்து கவிழ்ந்து பயங்கர விபத்து... 4 பேர் பலி; 20 பேர் படுகாயம்

ஏற்காட்டில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிறுவன் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். மேலும், 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

சேலம் மாவட்டம், ஏற்காட்டிலிருந்து இன்று மாலை 6:00 மணியளவில் சேலத்தை நோக்கி தனியார் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. மாலை நேரம் என்பதால் பேருந்தில் அதிகப்படியான பயணிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ஏற்காடு மலையின் 11 வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் வந்து கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்தது.

இந்த பயங்கர விபத்தினால் உருண்டுவந்த பேருந்து 12வது கொண்டை ஊசி வளைவில் விழுந்துள்ளது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த சிறுவன் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்து
விபத்து

மேலும், இந்த பேருந்து விபத்தில் சிக்கி பலர் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் அவ்வழியாக வரும் வாகனங்கள் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் அப்பகுதியில் போக்குவரத்தை சீர் செய்யவும் காவல்துறையினர் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

தமிழக அரசு உஷார்... கேரளாவில் வேகமெடுக்கும் பறவைக் காய்ச்சல் பரவல்!

பழிக்குப்பழி... திருச்சியில் பிரபல ரவுடி முத்துக்குமார் பட்டப்பகலில் படுகொலை!

தூக்க கலக்கத்தில் பாறையில் மோதிய வேன் ஓட்டுநர்... 31 பேர் படுகாயம்!

வாக்கு எண்ணும் மையத்திற்குள் அத்துமீறி நுழைய முயன்ற வாலிபர்... சுற்றி வளைத்து கைது செய்த போலீஸார்!

கார் மீது சிலிண்டர் லாரி மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியான சோகம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in