அதிர்ச்சி... டெங்குவால் 10-ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு!

டெங்கு கொசு
டெங்கு கொசு

சென்னையில் டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவன் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவல் கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் 500-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் டெங்கு ஒழிப்பு பணிகளில் தீவிரப்படுத்துமாறு மாநில அரசு, உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

மேலும் அரசு மருத்துவமனைகளில் டெங்கு தனி வார்டுகளை உருவாக்குவதோடு, தேவையான அளவு ரத்தத்தையும் கையிருப்பில் வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொசு
கொசு

இந்நிலையில் சென்னை பூந்தமல்லியில் டெங்கு காய்ச்சல் பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த பத்தாம் வகுப்பு மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுநீரக பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுவனுக்கு, டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

உடலில் உப்பு அதிகரிப்பால் சிறுவன் உயிரிழப்பு என தகவல்
உடலில் உப்பு அதிகரிப்பால் சிறுவன் உயிரிழப்பு என தகவல்

இதையடுத்து அவருக்கு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், உடலில் உப்பு அதிகமாக இருந்ததால் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

என் சாவுக்கு எம்எல்ஏ தான் காரணம்... கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்த வாலிபர்!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.... வானிலை மையம் அறிவிப்பு

நாளை கடைசி தேதி.... 2250 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

அப்பாடா.... குறைந்தது தங்கத்தின் விலை... நகைப்பிரியர்கள் ஆறுதல்!

சோகம்... ஆந்திரா ரயில் விபத்தில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு....18 ரயில்கள் ரத்து

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in