அமெரிக்காவில் மீண்டும் ஒரு ஜார்ஜ் ஃபிளாய்ட் சம்பவம்... போலீஸார் கைது செய்ய அழுத்திய போது மூச்சுத் திணறி கறுப்பினத்தவர் பலி!

அமெரிக்காவில் போலீஸாரால் கறுப்பினத்தவர் கொலை
அமெரிக்காவில் போலீஸாரால் கறுப்பினத்தவர் கொலை

அமெரிக்காவில், விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்றவரை அந்நாட்டு போலீஸார் கைது செய்ய முயன்றபோது கீழே தள்ளி அழுத்தியதில் அவர் மூச்சுத் திணறி உயிரிழந்தார்.

அமெரிக்காவின் ஒஹாயோ மாகாணத்தில் கடந்த 18-ம் தேதி கார் ஒன்று அங்குள்ள மின்கம்பத்தின் மீது மோதியது. இந்நிலையில் அங்கு வந்த போலீஸார் இந்த விபத்து தொடர்பாக அருகில் இருந்தவர்களிடம் விசாரித்தனர். அப்போது விபத்தை ஏற்படுத்தியவர் அருகில் உள்ள பாருக்குள் ஓடிவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

ஃபிராங்க் டைசனை கீழே தள்ளி அழுத்தும் போலீஸார்
ஃபிராங்க் டைசனை கீழே தள்ளி அழுத்தும் போலீஸார்

இதையடுத்து போலீஸார் அந்த பாருக்குள் சென்று, விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநரான, கறுப்பினத்தை சேர்ந்த ஃபிராங்க் டைசன் (53) என்பவரை பிடிக்க முயன்றனர். அப்போது போலீஸாருக்கும் அவருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

போலீஸார், ஃபிராங்க் டைசனை கீழே தள்ளி அவரது கைகளை பின்புறமாக வைத்து விலங்கு பூட்ட முயன்றனர். அப்போது, போலீஸாரின் பலவந்தமாக அழுத்தியதில் ஃபிராங்க் டைசனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. தனக்கு மூச்சுத் திணறுவதாகவும், தன்னால் சுவாசிக்க இயலவில்லை என்றும் அவர் போலீஸாரிடம் தொடர்ந்து சொல்லி இருக்கிறார்.

ஆனால் போலீஸார் விடாமல் அழுத்தியதில் அவர் மூர்ச்சையானார். இந்நிலையில், சிறிது நேரத்தில் அவர் நிலைகுலைந்ததும், அவருக்கு நாடித்துடிப்பு உள்ளதா என போலீஸார் பரிசோதித்தனர். பின்னர் அவரை ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஃபிராங் டைசன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

ஃபிராங் டைசனை கைது செய்ய முயன்றபோது போலீஸார் உடலில் பொருத்தப்பட்டிருந்த கேமரா காட்சிகள் மூலம் இந்த சம்பவம் வெளியே தெரியவந்துள்ளது. கறுப்பினத்தவரான ஃபிராங்க் டைசன், போலீஸாரிடம் மூச்சுவிடமுடியவில்லை என கெஞ்சியும், விடாமல் அழுத்தி அவர் கொல்லப்பட்ட விவகாரம் அமெரிக்காவில், பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

ஜார்ஜ் பிளாய்ட்
ஜார்ஜ் பிளாய்ட்

ஏற்கெனவே, கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம், ஜார்ஜ் பிளாய்ட் என்ற கறுப்பினத்தவர், வெள்ளை போலீஸ் அதிகாரியால் கழுத்தில் மிதித்து கொல்லப்பட்ட சம்பவம் சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது மீண்டும் அதுபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது சர்வதேச அளவில் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

தீவிரவாதிகள் தாக்குதலில் 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் மரணம்; 6 பேர் படுகாயம்

மார்க் நெக்ஸ்ட்... ஸ்கில்ஸ் ஃபர்ஸ்ட்... பள்ளி மாணவர்களுக்கான டிப்ஸ்!

பீகாரில் இருந்து உ.பி.,க்கு 95 குழந்தைகள் கடத்தல்? - அதிரடியாக மீட்ட குழந்தைகள் நல ஆணையம்!

பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக போராட்டம்... அமெரிக்காவில் கோவை மாணவி கைது!

சல்மான் கான் வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட வழக்கு... போர்ச்சுகல் நாட்டில் அன்மோல் பிஷ்னோய் பதுங்கலா?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in