பெங்களூரு எல்இடி பயங்கரவாத வழக்கு: என்ஐஏ விசாரிக்க முடிவு!

பெங்களூரு எல்இடி பயங்கரவாத வழக்கு: என்ஐஏ விசாரிக்க முடிவு!

பெங்களூருவில் எல்இடி பயங்கரவாத வழக்கை என்ஐஏ விசாரிக்க உள்ளது. அத்துடன் சந்தேகத்திற்குரிய 6 பேரை காவலில் எடுத்து விசாரிக்க வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.

லஷ்கர்-இ-தொய்பா
லஷ்கர்-இ-தொய்பா

கர்நாடகா மாநிலம் பெங்ளூருவில் உள்ள ஆர்டி நகரில் ஜாஹித் தப்ரேஸ் என்பவரது வீட்டில் மத்தியக் குற்றப்பிரிவு போலீஸார் (சிசிபி) கடந்த ஜூலை 18 அன்று திடீரென சோதனையிட்டனர். அப்போது நான்கு கையெறி குண்டுகள் உள்பட ஆயுதங்கள், 45 தோட்டாக்களை கைப்பற்றினர். அத்துடன் 5 பேரை கைது செய்தனர். இந்த வழக்கை தற்போது தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரிக்க உள்ளது.

காவல்துறையின் கூற்றுப்படி, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் தடைசெய்யப்பட்ட அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்பு கொண்டிருந்தனர் என்று கூறப்படுகிறது. அத்துடன் நகரத்தில் அமைதியின்மையை உருவாக்க திட்டமிட்டனர் என்று போலீஸார் குற்றம் சாட்டுகின்றனர்.

வெளிநாட்டில் பதுங்கியுள்ள ஜுனைத் அகமது
வெளிநாட்டில் பதுங்கியுள்ள ஜுனைத் அகமது

இந்த வழக்கில் முக்கிய சதித்திட்டம் தீட்டியதாக சந்தேகிக்கப்படும் ஜுனைத் அகமது வெளிநாட்டில் பதுங்கியிருப்பதாகக் கூறப்படுவதால் இந்த வழக்கை என்ஐஏ தற்போது விசாரிக்கிறது. இதனால் இந்த வழக்கை என்ஐஏவிடம் ஒப்படைக்க சிசிபி நடவடிக்கை எடுத்துள்ளது.

ஜுனைத் அகமது 2008 பெங்களூரு தொடர் குண்டுவெடிப்பு குற்றவாளி டி நசீருடன் மத்திய சிறையில் உள்ள பரப்பன அக்ரஹாராவில் தொடர்பு கொண்டதாகக் கூறப்படுகிறது, மேலும் சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு அவர் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டு வருவதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

கடந்த 2017-ம் ஆண்டு ஆர்டி நகரில் நடந்த தொழிலதிபர் கொலை வழக்கில் ஜுனைத் மற்றும் 5 பேர் கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். அப்போதுதான் நசீர் ஜுனைத்தை சந்தித்தார். இதன் பின்னர், அவர் நாட்டை விட்டு வெளியேறி மத்திய கிழக்கில் பதுங்கியிருப்பதாக கூறப்படுகிறது. பயங்கரவாத வலையமைப்பில் ஈடுபட்டதாகக் கூறப்படும் முழுமையான விசாரணைக்காக நசீர் உள்ளிட்ட குற்றவாளிகளை காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏ திட்டமிட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in