மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் காலமானார்

பங்காரு அடிகளார்
பங்காரு அடிகளார்

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர் பங்கார அடிகளார் இன்று காலமானார்.

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை நிறுவி அதன் குருவாக செயல்பட்டு வந்தவர் பங்காரு அடிகளார். ஆதிபராசக்தி சித்தர் பீடம் சார்பில் மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரிகள், பள்ளிகள் என ஏராளமான கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பங்காரு அடிகளாரின் ஆன்மிக சேவையை பாராட்டி கடந்த 2019ம் ஆண்டு இந்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது அளித்து கௌரவித்தது.

அம்மன் பீடத்தில் பங்காரு அடிகளார் (கோப்பு படம்)
அம்மன் பீடத்தில் பங்காரு அடிகளார் (கோப்பு படம்)

இந்நிலையில் இன்று திடீரென மாரடைப்பால் பங்காரு அடிகளார் காலமானார். அவருக்கு வயது 82. காலமான பங்காரு அடிகளாருக்கு பல்வேறு நாடுகளிலும் பக்தர்கள் உள்ளனர். அவர்களால் ’அம்மா’ என்று அழைக்கப்பட்டு வந்தார். பங்காரு அடிகளாரின் மறைவு ஆதிபராசக்தி சித்தர் பீட பக்தர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு மேல்மருவத்தூரில் நடைபெற்ற நவராத்திரி அகண்ட தீபம் ஏற்றும் நிகழ்ச்சியில் அவர் கடைசியாக பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in