
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர் பங்கார அடிகளார் இன்று காலமானார்.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை நிறுவி அதன் குருவாக செயல்பட்டு வந்தவர் பங்காரு அடிகளார். ஆதிபராசக்தி சித்தர் பீடம் சார்பில் மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரிகள், பள்ளிகள் என ஏராளமான கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பங்காரு அடிகளாரின் ஆன்மிக சேவையை பாராட்டி கடந்த 2019ம் ஆண்டு இந்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது அளித்து கௌரவித்தது.
இந்நிலையில் இன்று திடீரென மாரடைப்பால் பங்காரு அடிகளார் காலமானார். அவருக்கு வயது 82. காலமான பங்காரு அடிகளாருக்கு பல்வேறு நாடுகளிலும் பக்தர்கள் உள்ளனர். அவர்களால் ’அம்மா’ என்று அழைக்கப்பட்டு வந்தார். பங்காரு அடிகளாரின் மறைவு ஆதிபராசக்தி சித்தர் பீட பக்தர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு மேல்மருவத்தூரில் நடைபெற்ற நவராத்திரி அகண்ட தீபம் ஏற்றும் நிகழ்ச்சியில் அவர் கடைசியாக பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாமே...
உலகின் நெ.1 கார்ல்சனை வீழ்த்திய தமிழர்.. இளம் சாதனையாளருக்கு குவியும் பாராட்டு!
மீண்டும் வெடித்து சிதறிய வால்நட்சத்திரம்... பூமியை நெருங்கும் ஆபத்து!
’லியோ’ விமர்சனம் : இதெல்லாமே பெரிய சறுக்கல்... புலம்பும் ரசிகர்கள்!
வாசகர்களுக்கு ரூ.5,00,000 பரிசு... கவிஞர் வைரமுத்து அறிவிப்பு!
அதிர்ச்சி... ரூ.1,000 கோடி மதிப்புள்ள ஜவுளிகள் தேக்கம்! கதறும் நெசவாளர்கள்!