
ஆபாச வீடியோவை காட்டி 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் 7 வயது சிறுமி அண்டை வீட்டில் நேற்று விளையாடச் சென்றுள்ளார். அப்போது அந்த வீட்டில் இருந்த 22 வயது வாலிபர், அந்த சிறுமியிடம் செல்போனில் ஆபாச படம் காட்டி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.
இதனால் சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அவரது தாய் அங்கு சென்ற போது, வாலிபர் பலாத்கார முயற்சியில் ஈடுபட முயற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது சிறுமியின் உடலில் உடைகள் இல்லாமல் இருந்ததைக் கண்டு அவரது தாய் அதிர்ச்சியடைந்தார். உடனடியாக வாலிபரிடம் இருந்து தனது மகளை மீட்ட அவரது தாய், சத்தம் போடவும் அவரது உறவினர்கள் திரண்டனர். ஆனால், அவர்கள் பிடியில் இருந்து வாலிபர் தப்பியோடி விட்டார்.
இதையடுத்து பிஸ்ராக் காவல் நிலையத்தில் சிறுமியின் தாய் புகார் அளித்தார். இதன் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து வாலிபரை நேற்று இரவே கைது செய்தனர். அவர் மீது பல்வேறு பிரிவுகளின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
பகீர்... 250 பாலஸ்தீன குழந்தைகள் மரணம்!
பிறந்து 72 நாட்களில் 31 வகையான சான்றிதழ்கள்... உலக சாதனை படைத்த குழந்தை
க்ளாமர் லுக்கில் கெத்து காட்டும் நயன்தாரா!
மாணவர்களுக்கு சப்ளை... உல்லாச வாழ்க்கை; 3,750 போதை மாத்திரைகளுடன் 4 இளைஞர்கள் கைது