
ஆந்திர அரசு பேருந்து ஓட்டுநர் மீது மர்ம கும்பல் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பேருந்து ஒன்று பெங்களூரில் இருந்து விஜயவாடாவுக்கு சென்று கொண்டிருந்தது. பேருந்து நெல்லூர் மாவட்டம் கவாலி புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்த போது, முன்னால் சென்ற கார் ஓட்டுநர் வழிவிடவில்லை என தெரிகிறது.
எனவே, பேருந்து ஓட்டுநர் வழிவிடுமாறு ஹாரன் அடித்துள்ளார். இதனால் காரில் இருந்தவர்கள் ஆத்திரம் அடைந்து, சாலையில் பேருந்தை வழிமறித்து காரை நிறுத்தி, பேருந்து ஓட்டுநரை சரமாரியாக தாக்கினர். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் தடுத்து சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
அதைத் தொடர்ந்து பேருந்து சென்று கொண்டிருந்த நிலையில், மத்தூர்பாடு என்ற இடத்தில் காரில் இருந்தவர்கள் மீண்டும் பேருந்தை நிறுத்தி ஓட்டுநரை கீழே இறக்கி கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். தடுக்க முயன்ற பயணிகளையும் தாக்கினர்.
அதனை வீடியோ பதிவு செய்த பயணிகள் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். காயம் அடைந்த பேருந்து ஓட்டுநர் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அதில், ஓட்டுநரை தாக்கியது சிவாரெட்டி, வில்சன், கிரண் உள்ளிட்டோர் என தெரியவந்தது. அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், தலைமறைவாக உள்ளவர்களை தேடி வருகின்றனர். ஓட்டுநர் தாக்கப்படும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் வாசிக்கலாமே...
அடுத்த அதிர்ச்சி... இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகம் மீது பாட்டில், கல்வீச்சு!
தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்வு... நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல்... ரூ.20 கோடி கேட்டு பரபரப்பு!
பிக் பாஸ் வீட்ல இந்த கூத்தெல்லாம் நடக்குது... உண்மையை போட்டுடைத்த முன்னாள் போட்டியாளர்!